Wednesday, June 22, 2011

காவி யுத்தம் வெளிப்படுத்தும்  ஹிந்துத்வா பயங்கரவாதம்: சந்தீப் பாண்டே 

Original_mg-safron-war-hindutva
ஆவணப்படம் "காவி யுத்தம்" திரையிடப்பட்டது; யோகியின் அரசியல் சமூக  அமைப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்: ரூப் ரேகா வெர்மா
The Milli Gazette
லக்னௌ: காவி யுத்தம் - தேசத்திற்கெதிரான போர் - மத தீவிரவாத அரசியலை ஆதரித்துப் பேசும் பிஜேபி MP -யும், கோரக்நாத் பீடத்தின் தற்போதைய மடாதிபதியுமான  யோகி ஆதித்யநாத்-இன் மத வெறியை மையக் கருத்தாகக்  கொண்டு தயாரிக்கப்பட்ட ஆவணப்படம், UP பத்திரிக்கையாளர் மையத்தில் ஏப்ரல் 16 அன்று திரையிடப்பட்டது. இப்படம் ஹிந்துத்வா அமைப்புகளால் நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதச் செயல்களை காட்சிப்படுத்தி இருக்கிறது.

இப்படத்தை திரையிட்ட பிறகு நடந்த கலந்துரையாடலில் பார்வையாளர்களிடம் சமூக சேவகர் சந்தீப் பாண்டே விளக்கமளித்தார். கிழக்கு உ.பி. முழுவதும் ஹிந்துத்வா பயங்கரவாதம் சோதித்துப் பார்க்கப்படுகிறது. ஆனால் இச்சோதனைகளை உ.பி.அரசாங்கம் தொடர்ந்து கண்டு கொள்வதே இல்லை. யோகி ஆதித்யனாத்தும், அவரால் ஆதரிக்கப்படும்  ஹிந்து யுவ வாகினியும் அப்பகுதிகளில் தொடர்ந்து கலவங்களையும், படுகொலைகளையும் நடத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன் கலீதாபாத்துக்குச் சென்று கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர் சொஹ்ராப், ஹிந்து யுவ வாகினியைச் சேர்ந்த தீவிரவாதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இது போன்ற சூழ்நிலையில் தான், இப்படத்தின் மூலம் அங்கு நடத்தப்பட்டு வரும் மதவெறி சோதனையை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சொஹைப் கூறியதாவது: காவி யுத்தம் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் பயங்கரவாத செயல்களை ஆவணப்படுத்தி இருப்பதோடு, தலித்துகளும், பெண்களும், குழந்தைகளும் எவ்வாறு மதவெறி ஊட்டப்படுகிரார்கள் என்பதையும் தெளிவாக பதிவு செய்திருக்கிறது.

லக்னௌ பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், சாஜி துனியாவின் செயலாளருமான பேராசிரியர் ரூப் ரேகா வெர்மா அவர்கள் பேசும்போது, உ.பி. முழுவதும் புரட்சிகரமான செயல்களால் ஏற்படும் முன்னேற்றத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் சிக்கித் தவிக்கிறது. அப்பகுதி சமூக கட்டமைப்பு  முழுவதும் மதவாத சக்திகளின் நாட்டாமையின் கீழ் செயல்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கெதிரான ஏராளமான கொடுமைகள் தினமும் அரங்கேற்றப்படுகிறது.

அயோத்தியைச் சேர்ந்த ஒரு சாமியார் யுகள் கிஷோர் கரன் சாஸ்திரி அவர்கள் கூறியதாவது:  யோகி ஆதித்யனாத்தின் செயல்பாடுகள் அனைத்தும் யோகிகளின் வழமைக்கு  மாற்றமான நடவடிக்கைகளாகவே இருக்கிறது. இவரின் நடத்தையில் கடுமை வெளிப்படுகிறது. இது போன்ற ஆவணப் படங்களால் இங்கு நடத்தப்படும் மதவெறி சோதனைகளையும், நடவடிக்கைகளையும் மக்கள் அறிந்துகொள்வார்கள்.

ஹிந்தியில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை இயக்கியவர்கள் ராஜீவ் யாதவ், சாநவாஸ் ஆலம், லக்ஸ்மன் பிரசாத் ஆகியோராவர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்: பேராசிரியர் நதீம் ஹஸ்னைன், அருந்ததி துரு, சீட்லா சிங், சுமன் குப்தா, அம்ப்ரிஸ் குமார், சித்தார்த் கலான்ஸ், ரந்தீர் சிங் சுமன், லால் பகதூர் சிங், ஏக்தா சிங், ரவி சேகர் போன்ற லக்னௌ-ஐச் சேர்ந்த பல அறிவுஜீவிகள் கலந்து கொண்டனர்.

Saffron War is available at Rs 95 (postage extra) from: 632/13, Shankarpuri, Kamta, Post: Chinhat,
Lucknow, UP–Tel: 09415254919, 09452800752 www.mediachargesheet.com)

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM