Monday, June 27, 2011

ஷர்மிளாவின் உண்ணாவிரதத்தை ஏன் கண்டுகொள்வதில்லை? அரசைக் கேள்வி கேட்கும் பொது சமூகம்

நியூ டெல்லி: ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958,  (Armed Forces (Special Powers) Act, 1958 (AFSPA) ஐ நீக்கக் கோரி நவம்பர் 2000 முதல் தொடர்ந்து  உண்ணா விரதம் இருந்து வரும் இரோம் சானு ஷர்மிலா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜூன் 25 அன்று புது டெல்லியில் உள்ள ராஜ் காட்டில்

Sunday, June 26, 2011

IFF நடத்திய 'நல்ல குடும்பம், நல்ல சமூகம்'

தம்மாம்: தம்மாமில்  உள்ள புலம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்க இஸ்லாத்தைப்பற்றியும் , குடும்ப வாழ்க்கையைப்பற்றிய  அதன்போதனைகள் பற்றியும்  இந்தியன்  பிராடெர்னிட்டி போரம்  (IFF) ஜூன் 24 அன்று 'நல்ல குடும்பம், நல்ல சமூகம்' (BETTER FAMILY, BETTER SOCIETY) என்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.





ரியாஸ் அஹமத் தனது உரையில்,  "முஸ்லிம்களின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது என்றாலும், நமது சமூகத்தை மறுசீரமைப்பு செய்ய பல வாய்ப்புகள் உள்ளன என்பதை நினைக்கும்போது ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது. சமூகக் கடமைகளை நிறைவேற்றவும், ஒற்றுமையை நிலை நாட்டவும், மாற்றத்திற்கான செயல்பாடுகளில்  நிலை குலைந்து போகாமல் இருக்கவும் வலியுறுத்தினார்.


ஏராளமானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், மக்தூம் நைனா அவர்கள், "மேற்கத்தியக் கலாசாரம் குடும்ப அமைப்பைச் சீரழித்துவிட்டது. எனவே, குடும்ப அமைப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.


நன்றி: டூசர்கில்

Thursday, June 23, 2011

போர்பெஸ்கஞ் படுகொலையில் சிபிஐ விசாரணை கோரி எஸ்.டி.பி.ஐ. மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி

By Mumtaz Alam Falahi, TwoCircles.net,

பாட்னா: போர்பெஸ்கஞ் போலீஸ் துப்பாக்கி சூட்டைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகளால் நடத்தப்பட்ட முதல் எதிர்ப்புப் பேரணி இது தான். இதில் அரை டஜனுக்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டன. பேரணியில் கலந்து கொண்டவர்கள் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராகவும், துணை முதல்வரும், பிஜேபி தலைவருமான சுசில் குமார் மோடிக்கு எதிராகவும் கடுமையான கோசங்களை எழுப்பிக்கொண்டே சென்றனர். அவர்கள் பீகாரில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தவும், துப்பாக்கி சூட்டில் 6  அப்பாவி முஸ்லிம்கள் பலியானதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
 





















நேற்று (ஜூன் 22) மதியம் 2  மணிக்கு காந்தி மைதானத்திலிருந்து பேரணி துவங்கியபோது கலந்து கொண்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பேரணி கவர்னர் மாளிகையை நோக்கி சென்றது. இருந்தபோதிலும், செல்லும் வழியில் ஏராளமான மக்கள் இப்பேரணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது போன்ற பேரணியை நடத்தி முடிக்க முஸ்லிம் அமைப்புகளுக்கு 20 நாட்கள் தேவையாகிவிட்டது.
பேரணியின் முடிவில், கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இக்கூட்டமைப்பில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, பாரதிய மூமின் பிரண்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சில அமைப்புகள் கலந்து கொண்டன.
 
கோரிக்கைகள்:
 
* BJP MLC அசோக் அகர்வால், அவரின் மகன் சௌரப் அகர்வால், SP, அராரிய கரிமா மாலிக், SDO அசோக் சௌதரி ஆகியோரைக் கைது செய்து, பிரிவு 302-இன் கீழ் வழக்குப் பதிய வேண்டும்.
* போர்பெஸ்கஞ் கிராமத்தின் பழைய பாதையை மீண்டும் திறந்து விட வேண்டும்.
* கிராமவாசிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
* இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.
 

Wednesday, June 22, 2011

காவி யுத்தம் வெளிப்படுத்தும்  ஹிந்துத்வா பயங்கரவாதம்: சந்தீப் பாண்டே 

Original_mg-safron-war-hindutva
ஆவணப்படம் "காவி யுத்தம்" திரையிடப்பட்டது; யோகியின் அரசியல் சமூக  அமைப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்: ரூப் ரேகா வெர்மா
The Milli Gazette
லக்னௌ: காவி யுத்தம் - தேசத்திற்கெதிரான போர் - மத தீவிரவாத அரசியலை ஆதரித்துப் பேசும் பிஜேபி MP -யும், கோரக்நாத் பீடத்தின் தற்போதைய மடாதிபதியுமான  யோகி ஆதித்யநாத்-இன் மத வெறியை மையக் கருத்தாகக்  கொண்டு தயாரிக்கப்பட்ட ஆவணப்படம், UP பத்திரிக்கையாளர் மையத்தில் ஏப்ரல் 16 அன்று திரையிடப்பட்டது. இப்படம் ஹிந்துத்வா அமைப்புகளால் நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதச் செயல்களை காட்சிப்படுத்தி இருக்கிறது.

இப்படத்தை திரையிட்ட பிறகு நடந்த கலந்துரையாடலில் பார்வையாளர்களிடம் சமூக சேவகர் சந்தீப் பாண்டே விளக்கமளித்தார். கிழக்கு உ.பி. முழுவதும் ஹிந்துத்வா பயங்கரவாதம் சோதித்துப் பார்க்கப்படுகிறது. ஆனால் இச்சோதனைகளை உ.பி.அரசாங்கம் தொடர்ந்து கண்டு கொள்வதே இல்லை. யோகி ஆதித்யனாத்தும், அவரால் ஆதரிக்கப்படும்  ஹிந்து யுவ வாகினியும் அப்பகுதிகளில் தொடர்ந்து கலவங்களையும், படுகொலைகளையும் நடத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன் கலீதாபாத்துக்குச் சென்று கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர் சொஹ்ராப், ஹிந்து யுவ வாகினியைச் சேர்ந்த தீவிரவாதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இது போன்ற சூழ்நிலையில் தான், இப்படத்தின் மூலம் அங்கு நடத்தப்பட்டு வரும் மதவெறி சோதனையை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சொஹைப் கூறியதாவது: காவி யுத்தம் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் பயங்கரவாத செயல்களை ஆவணப்படுத்தி இருப்பதோடு, தலித்துகளும், பெண்களும், குழந்தைகளும் எவ்வாறு மதவெறி ஊட்டப்படுகிரார்கள் என்பதையும் தெளிவாக பதிவு செய்திருக்கிறது.

லக்னௌ பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், சாஜி துனியாவின் செயலாளருமான பேராசிரியர் ரூப் ரேகா வெர்மா அவர்கள் பேசும்போது, உ.பி. முழுவதும் புரட்சிகரமான செயல்களால் ஏற்படும் முன்னேற்றத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் சிக்கித் தவிக்கிறது. அப்பகுதி சமூக கட்டமைப்பு  முழுவதும் மதவாத சக்திகளின் நாட்டாமையின் கீழ் செயல்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கெதிரான ஏராளமான கொடுமைகள் தினமும் அரங்கேற்றப்படுகிறது.

அயோத்தியைச் சேர்ந்த ஒரு சாமியார் யுகள் கிஷோர் கரன் சாஸ்திரி அவர்கள் கூறியதாவது:  யோகி ஆதித்யனாத்தின் செயல்பாடுகள் அனைத்தும் யோகிகளின் வழமைக்கு  மாற்றமான நடவடிக்கைகளாகவே இருக்கிறது. இவரின் நடத்தையில் கடுமை வெளிப்படுகிறது. இது போன்ற ஆவணப் படங்களால் இங்கு நடத்தப்படும் மதவெறி சோதனைகளையும், நடவடிக்கைகளையும் மக்கள் அறிந்துகொள்வார்கள்.

ஹிந்தியில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை இயக்கியவர்கள் ராஜீவ் யாதவ், சாநவாஸ் ஆலம், லக்ஸ்மன் பிரசாத் ஆகியோராவர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்: பேராசிரியர் நதீம் ஹஸ்னைன், அருந்ததி துரு, சீட்லா சிங், சுமன் குப்தா, அம்ப்ரிஸ் குமார், சித்தார்த் கலான்ஸ், ரந்தீர் சிங் சுமன், லால் பகதூர் சிங், ஏக்தா சிங், ரவி சேகர் போன்ற லக்னௌ-ஐச் சேர்ந்த பல அறிவுஜீவிகள் கலந்து கொண்டனர்.

Saffron War is available at Rs 95 (postage extra) from: 632/13, Shankarpuri, Kamta, Post: Chinhat,
Lucknow, UP–Tel: 09415254919, 09452800752 www.mediachargesheet.com)

Thursday, June 16, 2011

தினக்ஸ்: ஒரு கேடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா??

தினக்ஸ்: ஒரு கேடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா??
மோடியை ஆதரிக்கும் ஹிந்தி  திரைப்பட  இசை இயக்குனரும், பரேல்வி உலமாவும்

By TCN Special Corespondent,

அஹ்மதாபாத்: தேவ்பந்தின் தலைமை ஆசிரியர் மௌலானா குலாம் முஹம்மத் வஷ்டான்வியும், பிரபல தொழிலதிபர் ஜாபார் சரேஷ்வாலாவும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பு அடங்குவதற்குள் இப்பட்டியலில் மீண்டும் சிலர் இணைந்துள்ளனர். அந்த புதுமுகங்கள் ஹிந்தி திரைப்பட இசை அமைப்பாளர் இஸ்மாயீல் தர்பாரும், பரேல்வி உலமா அப்துல் சத்தார் ஹம்தானியும் ஆவர். இவர்கள் மோடியின் "வளர்ச்சித் திட்டங்களையும், தீவிரவாத எதிர்ப்புக் கொள்கைகளையும்" ஆதரிக்கின்றனர்.

தர்பார் அரசியலில் நுழைந்து சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்கிறார். டிசம்பர் 2012 -இல் நடக்கவிருக்கும் தேர்தலில் சூரத்திலிருந்து போட்டியிடுவதற்குண்டான எண்ணத்தோடு இருக்கிறார். ஹம்தாணி தன்னுடைய அரசியல் பிரவேசத்தைப் பற்றி இன்னும் தெளிவுபடுத்தவில்லை. 
தர்பார் சமீபத்தில் பிஜேபி தலைவர் நிதின் கட்கரியை நாக்பூரில் சந்தித்து தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருக்கிறார். பிறகு நாக்பூரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், 2002 -இல் நடந்த கலவரங்களை மறந்துவிடுமாறும், குஜராத்தில் (நரமாமிச) மோடியை ஆதரிக்க வேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆச்சரியம் என்னவென்றால், 1993 -இல் போர்பந்தரிலுள்ள கோசபராவில் வெடிமருந்துகளையும், துப்பாக்கிகளையும் ஹம்தாணி கொள்முதல் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டவர். அவைகளை மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு தாவூத் இப்ராஹீமும், அவரின் கூட்டாளிகளும் பயன்படுத்தினர் என்றும் கூறப்பட்டது.

சுமார் 60 வயதைக் கடந்துள்ள ஹம்தாணி குஜராத் மாநில பரேல்வி முஸ்லிம்களிடையே நல்ல செல்வாக்குப் பெற்றவர். 
 
ஹம்தாநியுடன் கைது செய்யப்பட்ட 21 பேரும் தடா (Terrorist and Disruptive Activities Act) சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பிறகு நடந்த விசாரணையில் போதிய சாட்சியமின்றி குற்றம் நிரூபிக்க முடியாததால் விடுதலை செய்யப்பட்டனர்.
 
காங்கிரஸின் ஆதரவாளராக இருந்து வந்த ஹம்தாணி, சிறையிலிருந்து விடுதலையான பிறகு அதற்கு நேர் எதிரான நிலையில் இருக்கிறார். அவர் இதுவரை வேறு எந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளாவிட்டாலும், போர்பந்தரில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான குஜராத்தைச் சேர்ந்த அஹமத் படேல்-ஐ "தீவிரவாதிகளின் ஆதரவாளர்" என்றும் சாடியுள்ளார். 
 தப்லீக் ஜமாஅத்-ஐ தீவிரமாக எதிர்க்கும் ஹம்தாணி, அதனை தீவிரவாதிகளை ஆதரிக்கும் அமைப்பு என்கிறார். அஹமத் படேல் ஒரு தப்லீக்-இன் ஆதரவாளர். எனவே அதன் உருவாக்கமான அவரும் ஒரு தீவிரவாதியே என்கிறார்.
 
மோடியைக் குறித்து ஹம்தாணி கூறுவதாவது: "மோடி தீவிரவாதத்தை எதிர்த்து பலத்தைப் பிரயோகிக்கிறார்." ஆனால், பொதுவான முஸ்லிம்கள் 2002 -இல் நடந்த கலவரத்துக்கும், அதில் 2000 -க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், பல நூறு கோடி மதிப்புள்ள முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டதற்கும் மோடியே காரணம் என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.
 
ஹம்தானியால் 3 மூத்த IPS அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகும். அதுல் கர்வால், H P சிங்க், சதீஸ் வெர்மா ஆகியோரே அந்த 3 பேராவர். அவர்கள் போர்பந்தரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஹம்தானிக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜூன் 11 அன்று குஜராத் அரசால் அறிவிக்கை அனுப்பப் பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் யாட்டின் ஓஜா அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட போது நலன் வழக்கினை குஜராத் உயர்நீதி மன்றம் விசாரித்து உத்தரவிட்ட பிறகே இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது போன்ற நடவடிக்கைகள் மோடிக்கு ஆதரவாக இருப்பது போல் தோன்றினாலும்,  அவர் இதன் மூலம் தன்னை திறமையான தலைவரைப் போல் காட்டிக்கொண்டு, ஒரு வேலை மத்தியில் பிஜேபி ஆட்சி அமைத்தால் பிரதமராகலாம் என்று கனவு காண்கிறார். ஆனால், இதில் மிகவும் நெருடலாக இருப்பது 2002 கலவரம் தான்.

நன்றி: TwoCircles.net

Tuesday, June 14, 2011

POPULAR FRONT OF INDIA ORGANISED "SCHOOL CHALO"

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய "ஸ்கூல் சலோ" கல்வி விழிப்புணர்வுப் பிரச்சாரம்

12/06/2010; PFI CBE;

பாப்புலர்   ப்ரண்ட் ஆப் இந்தியாவின்  சார்பாக மே முதல் ஜூன் வரை நடை பெறும்   "SCHOOL CHALO" கல்வி விழிபுணர்வு பிரச்சாரம் தற்போது  நடை பெற்று வருகின்றது. 
 
அதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடை பகுதியில் 12-ஆந்தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று கல்வி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. 
 
இதில் பெருந்திரலான குழந்தைகள் கல்வி  விழிப்புணர்வு பிரச்சார  தட்டிகளுடன் பேரணி சென்றனர். கரும்புக்கடை சுன்னத் ஜமாஅத் பள்ளி இமாம் அப்துல் அஜீஸ் பாகவி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
 
 அப்துல் அஜீஸ் பாகவி உரையாற்றுகிறார்
 
SDPI மாவட்ட தலைவர்  V.M.அபுதாகிர் சிறப்புரையாற்றினார். கரும்புக்கடை  பகுதி செயலாளர் K.M.அப்பாஸ் நன்றி உரையாற்றினார். கரும்புக்கடை  பகுதி தலைவர் முஹம்மது அலி அவர்கள் குழந்தைகளுக்கு பல்வேறு பரிசு பொருட்களை வழங்கினார். மிகவும் சிறப்பாக இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.  
 
ஊர்வலத்தில் ஆர்வமாக பங்கேற்ற சிறுவர், சிறுமியர் 













Thursday, June 9, 2011

பிஜேபி பஞ்சாயத் துணைத் தலைவர் SDPI-இன் ஆதரவுடன் UDF-ஆல் தோற்கடிக்கப்பட்டார் 

Submitted by admin4 on 8 June 2011 - 12:27pm
By TCN News,

காசர்கோடு: மஞ்சேஷ்வர் கிராமத்தின் பஞ்சாயத் துணைத் தலைவராக பிஜேபி-இன் ஹரிஷ்ச்சந்திரன் பதவி வகித்து வந்தார். நேற்று SDPI-இன் ஆதரவுடன் UDF (காங்கிரஸ் கூட்டணி)ஆல் அப்பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். துணைத் தலைவருக்கு எதிராக UDF - ஆல் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் SDPI -இன் ஒரே ஒரு கிராம பஞ்சாயத் உறுப்பினரான மைமூனா அபூபக்கர் அவர்கள் UDF -ஐ ஆதரித்து அளித்த வாக்கின் மூலம் அவர் தோற்கடிக்கப்பட்டார். பிஜேபி-யும், இடதுசாரிகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

காசர்கோடு மாவட்டத்திலுள்ள மன்ஜெஷ்வர் கிராம பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் முஸ்லிம் லீகும், பிஜேபி-யும் தலா 8 உறுப்பினர்களையும், SDPI, CPI (M), CPI, காங்கிரஸ், சுயேச்சை ஆகியவைகள் தலா 1 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. SDPI உறுப்பினரும், சுயேச்சை உறுப்பினரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

6 மாதத்திற்கு முன்பு நடந்த பஞ்சாயத் துணைத் தலைவர் தேர்தலில் ஹரிஷ்ச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அவரை ஆதரித்து ஒரு முஸ்லிம் லீக் உறுப்பினர் வாக்களித்தார். காங்கிரஸ் உறுப்பினரின் வாக்கு செல்லாமல் போனதால் அவருக்கு அப்பதவி கிடைத்தது. பிறகு முஸ்லிம் லீக்கால் அவ்வுறுப்பினர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். பிறகு நடந்த இடைத் தேர்தலில் மற்றொரு முஸ்லிம் லீக் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து UDF நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வரத் தீர்மானித்தது.

Wednesday, June 8, 2011

6 முஸ்லிம்கள் துப்பாக்கி சூட்டில் பலி: போலீசார் மீது நடவைக்கை எடுக்க நிதீஷ் குமாரிடம் மில்லி கவுன்சில், வெல்பேர் பார்ட்டி வலியுறுத்தல்

By Md. Ali, TwoCircles.net,

நியூ டெல்லி: பீகாரிலுள்ள அராரியா மாவட்டத்திலுள்ள போர்பெஸ்கஞ் பிளாக்-ஐச் சேர்ந்த மக்கள், இரண்டு கிராமங்களை இணைக்கும் சாலைக்கு இடையே உள்ள தடுப்பை நீக்கக் கோரி நடத்திய அறவழிப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

சம்பவம் குறித்து மில்லி கவுன்சிலின் பொதுச் செயலாளர் திர. மன்சூர் ஆலம் TwoCircles.நெட்-டிடம் பேசும்போது, "நிதீஷ் குமார் எந்த மதசார்பற்ற கொள்கையை பின்பற்றுகிறார் என்பது முக்கியமல்ல. போகும் வழியில்  6 அப்பாவி முஸ்லிம்களை போலீசார் குறிவைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். இது இவருக்கும், RSS -க்குமிடையே எவ்வித வேற்றுமையும் இல்லை என்பதையே காட்டுகிறது."  போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை ஒளிவு மறைவின்றி விமர்சிக்கிறார். நிராயுதபாணிகளான கிராமத்தினரை துரத்திச் சென்றும், வீட்டுக்குள் புகுந்தும் சுட்டுக் கொன்றுள்ளனர். சிறு குழந்தைகளையும், பெண்களைக் கூட விட்டு வைக்கவில்லை. முஸ்லிம்களை சுட்டுக் கொள்வது என்பது போலீசாரின் பொதுவான செயல் திட்டம் என்றாகிவிட்டது. ஏனென்றால், நீதிக்கு முன் நிறுத்தாமலேயே சிறுபான்மை முஸ்லிம்களை சுட்டுக் கொள்ளலாம் என்று அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள்" என்கிறார் Dr. ஆலம்.

நிதீஷ் குமார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் Dr. ஆலம் கூறுகிறார்: நிதீஷ் குமார், அவரின் மதிப்பைக் குறித்து சிந்திக்கக் கூடியவர் என்றால், தவறிழைத்த காவலர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பக்களுக்கு தலா 7 லச்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்" என்று.


Dr. Manzoor Alam, general secretary of Milli Council
Mujtaba Farooque, president of the recently launched political party Welfare Party of India (WPI), said, “The brutal way in which the police acted and fired at the unarmed villagers shows its biased mentality. There were ways through which the tragedy could have been averted but it’s complete highhandedness of the administration to think that it can kill innocent poor Muslims and no body will say anything.”
“The way Nitish Kumar government has handled the situation is completely unacceptable and the WPI is certainly going to raise the issue as the state as well as the national level,” added Farooque.
Both Farooque and Manzoor Alam said that the community organizations will take immediate and required action against this kind of brutality against the minorities which if not stopped then will continue.


Mujtaba Farooque, president of Welfare Party of India
Dr Alam said that Milli Council will soon get in touch with other community organization and will take action in three ways. First of all efforts will be made to collect the testimonies and witnesses of the case and think of the possibility of taking legal action against those responsible for the worst kind of human rights violation.
Besides writing a letter to National Human Rights Commission, a delegation will also meet the Chief Minister of the state and will press for action. Dr Alam said, “We will also try to bring together all the Muslim MLAs and MLCs of the state and bring about a political pressure on the state government.”
And if the state government doesn’t respond then community organizations will organize protest against the state brutality in Bihar as well as at the national level.

Tuesday, June 7, 2011

எகிப்திலுள்ள "இஹ்வானுல் முஸ்லிமீன்"-இன் கட்சி பதிவு செய்யப்பட்டது

கெய்ரோ:  இஹ்வானுல் முஸ்லிமீனால் துவக்கப் பட்ட சுதந்திரம் - நீதி கட்சி (Freedom and Justice Party) எகிப்தின் அரசியல் கட்சிகளுக்கான கமிசனால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலில் தங்களின் கட்சி பங்கேற்கும் என்றும் அவர்களின் வலை தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று  முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடக் கூடிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இக்கட்சி மதசார்பற்றதாகவும், இஹ்வானுல் முஸ்லிமீனின் தலையீடு இல்லாமல் செயல்படக் கூடியதாகவும் இருக்கும். செப்டெம்பரில் நடக்கும் தேர்தலில் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதி எண்ணிக்கையைப் பெரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

"புதிய கட்சிகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள, ஒரு கட்சிக்குத் தேவையான எல்லா பத்திரங்களையும் முறைப்படி பெற்று சுதந்திரம் - நீதி கட்சி இன்று (திங்கள்) அங்கீகரிக்கப் பட்டது" என எகிப்தின் கெஜட் வலை தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சட்ட திட்டங்களின் அடிப்படையிலேயே இக்கட்சி செயல்படும் என்று கூறிக்கொண்டாலும், அதில் மென்மைப் போக்கை கடைபிடிக்கும் வகையில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவரை அதன் துணைத் தலைவராக நியமித்துள்ளது. மேலும் கிறிஸ்தவர்களையும், பெண்களையும் கட்சியில் இணைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

9000 அடிப்படை உறுப்பினர்களைப் பெற்றுள்ளதாக கடந்த மாதத்தில் இக்கட்சி அறிவித்தது. 1928-இல் இமாம் ஹசன் அல்-பன்னா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட "இஹ்வானுல் முஸ்லிமீன்" இயக்கம், அப்போதைய ஜனாதிபதி கமால் அப்துல் நாசரை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறி 1954 -இல் தடை செய்யப்பட்டது.

1970 -இல் அவ்வியக்கம் வன்முறைப் பாதையைக் கைவிட்டதாகக் கூறிய பிறகும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. அதுவே ஹோஸ்னி முபாரக்கை பதவியிலிருந்து துரத்த மிக முக்கியப் பங்காற்றியது. எகிப்தின் அதிபர் பதவியிலிருந்து முபாரக் நீக்கப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு இயக்கம் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. 

வரவிருக்கும் அதிபர் தேர்தலில் இவ்வியக்கம் பங்கேற்காது என்று அறிவித்துள்ள போதும், அதன் தலைவர்கள் அப்துல் முனிம் அபு அல்-புது, ஷேக் ஹசம் அபு இஸ்மாயில் ஆகிய இருவரும் போட்டியிடப் போவதாக தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

நன்றி :  Twocircles.com

Sunday, June 5, 2011

ராம் தேவுக்கு காவியை விட வெள்ளையே பெட்டர்: லாலு
ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்ட பிரபல யோகா சாமியார் பாபா ராம்தேவுக்கு காவி உடையை விட வெள்ளை உடையே பொருத்தமானது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

பாபா ராம்தேவ் குறித்து கருத்துக் கூறிய லாலு பிரசாத், ஒரு சாது எவ்வாறு பேச வேண்டுமோ அவ்வாறு ராம்தேவ் பேசவில்லை என்று கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னுடைய வேலைகளுக்காக பாபா ராம்தேவை பயன்படுத்திக் கொள்கிறது என்பது மிகவும் ஆபத்தானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாபா ராம்தேவை முன்னிலைப்படுத்த முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ராம்தேவ் உண்ணாவிரதத்தைத் தொடங்கியதுமே, உண்ணாவிரத மேடைக்கு முதன் முதலில் வந்தவர் சாத்வி ரிதம்பராதான். பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளில் மிக முக்கியமானவர் இவர் என்றும் லாலு கூறினார்.

பாபா ராம்தேவ் அரசியலில் நுழைவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ராம்தேவுக்கு காவி உடையை விட வெள்ளை உடைதான் (அரசியல்வாதிகளின் உடை) மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
 
நன்றி: இந்நேரம்.காம்

Saturday, June 4, 2011

தாம் நிரபராதி என்பதை முதலில் பாபா ராம்தேவ் நிரூபிக்கட்டும்: ஈ.வி.கே.எஸ்.

ணவி கடத்தல்! >>> ரயில் மோதி விவசாயி சாவு >>> ஜமாபந்தியை எதிர்த்து !



ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பாபா ராம்தேவ் முதலில் தாம் நிரபராதி என்பதை நிரூபிக்கட்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் இல்லத் திருமணம் சேலம் அம்மாப்பேட்டையில் வெள்ளிக் கிழமை காலை நடைபெற்றது. இத்திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ‘’ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ராம்தேவ்வும் தெரிவித்துள்ளார். பணம் சம்பாதிப்பது மட்டும் தான் அவரது குறிக்கோள். அவர் விமானம் வைத்து கொண்டு பறந்து கொண்டிருக்கிறார்.

அதிகம் நிதி வைத்து இருப்பவர்களைத் தான் அவர் அருகில் வைத்து கொள்வார். பணம் இல்லாதவர்களை வெளியில் தள்ளிவிடும் சுபாவத்தை கொண்ட அவர் லஞ்சத்தை ஒழிக்க போவதாக கூறுவது எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

முதலில் அவர் தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரித்து அவர் நிரபராதி என்று அறிவித்து விட்டு பின்னர் அவர் சமூக சேவையை தொடரலாம்’’ என்று கூறினார்.


நன்றி: இந்நேரம்
  

KAAVITH THEEVIRAVAATHAM

காவித் தீவிரவாதத்திலிருந்து திசை திருப்பவே 5 ஸ்டார் சத்தியாகிரகம் : திக்விஜய் சிங்!

பாபா ராம்தேவ் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், யோகா குரு பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காவித் தீவிரவாதத்தில் இருந்து மக்களின் கவனத்தை திருப்ப, ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி ஆதரவுடன் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது என்று திக் விஜய் சிங் கூறினார்.

இத்தகைய போராட்டத்தை ஊக்கப்படுத்துவதன் மூலம் ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகள், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இல்லாமலாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஐந்து நட்சத்திர வசதிகளுடன் அவருக்கு உண்ணாவிரத அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஜெட் விமானத்தில் பறக்கும் பாபா ராம்தேவ் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் எந்தவகையான சத்தியாகிரகம் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியது திக் விஜய்சிங், காவித் தீவிரவாதத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி.யால் திட்டமிடப்பட்டதே இந்த உண்ணாவிரதம் என்றும் திக்விஜய் சிங் கூறினார்.
 
நன்றி: இந்நேரம்.காம் 


Wednesday, June 1, 2011

ஓர் முன்னாள் ஜனாதிபதி பயங்கரவாதியாகிறார்

ஓர் முன்னாள் ஜனாதிபதி பயங்கரவாதியாகிறார்

திரு. ஆசிரியர் அவர்களுக்கு,

இரு தினங்களுக்குமுன் "முல்லா ஓமர் கொல்லப்பட்டார்" என்ற செய்தியைப் பல்வேறு செய்தித் தளங்களிலும்  தலைப்புச் செய்தியாக வாசிக்க நேர்ந்தது. இச்செய்தியை தினமணி, தினமலர் மற்றும் தட்ஸ்தமிழ் ஆகிய தமிழ் செய்தித்தளங்கள் வெளியிட்டிருந்தனர். அவர்களோடு இந்நேரம்.காமும் இச்செய்தியை வெளியிட்டிருந்ததையும் கவனித்தேன், என்றாலும் நான் அவதானித்த நுண்ணிய வேறுபாட்டை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முல்லா ஓமர் என்பவரை அமெரிக்கா 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான்மீது படையெடுக்கும்வரை அநேகமாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

9/11 தாக்குதலுக்குக் காரணம் பின்லேடன் என்பதாக சர்வதேச செய்தி ஊடகங்களும் அமெரிக்காவின் குரலையே எதிரொலித்த நிலையில், "பின்லேடன் தங்கள் நாட்டின் கவுரவ விருந்தினர் என்றும், 9/11 தாக்குதலுக்குப் பின்லேடன் காரணம் என்பதற்கான ஆதாரங்களை ஒப்படைத்தால், முறையாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தவர்தான் முல்லா ஓமர்.

உலகச்சந்தையில் கொடிகட்டி பறந்த ஓபியம் என்ற போதைப்பொருளை ஐ.நா சபையின் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, ஒழித்துக் கட்டுவதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டியபோதும் அதைத் தடுக்க முடியவில்லை. ஆனால் அப்போதைய ஆப்கன் ஜனாதிபதியாக இருந்த முல்லா ஓமர், ஒரேயொரு சட்டம் போட்டு சிலமாதங்களிலேயே பெருமளவில் குறைத்தார். மேலும், ஓபியம் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களையும் நிறைவேற்றியதை ஐ.நா மற்றும் அமெரிக்காவும் பாராட்டியதோடு, முல்லா ஓமரின் அரசுக்கு உதவுவதற்காக நிதி உதவியும் செய்தது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

போலியான காரணங்களைச் சொல்லி, முன்முடிவுடன் போரிட்ட அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு ஐநாவும் உலகநாடுகளும் ஒத்து ஊதியதால், உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக போர்நிறுத்தம் மேற்கொண்டு தலை மறைவாக இருக்கும் ஆப்கானின் முன்னால் ஜனாதிபதி முல்லா ஓமரை, பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றதாகச் சொன்னது. தட்ஸ்தமிழ்.காம் வெளியிட்ட இச்செய்தியில் முல்லா ஓமரை அவன் - இவன் என்றும், பயங்கரவாதி என்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

தட்ஸ்தமிழ் செய்தியாளாருக்கு முல்லா ஓமர் பயங்கரவாதி என்பது எப்படி தெரியும்? ஜனநாயக முறைப்படி ஒரு நாட்டுக்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அமெரிக்காவின் எதிரிக்கு அரசியல் அடைக்கலம் கொடுத்தார் என்ற காரணமன்றி, அதுவும் ஆதாரங்களை சமர்ப்பித்தால் விசாரித்து தண்டனை வழங்குவோம் என்று சொல்லியும், அமெரிக்கா அத்தகைய ஆதாரங்கள் எதையும் வழங்காமல் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் ஜனாதிபதியை எப்படி பயங்கரவாதி என்கிறார்கள் என்பது வியப்பாக உள்ளது!

தங்கள் நாட்டின்மீதான ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களெல்லாம் பயங்கரவாதிகள் என்றால் நமது தேசப்பிதா காந்தி உள்ளிட்ட சுதந்திரப்போராட்டத் தியாகிகள் அனைவருமே இவர்களின் பார்வையில் பயங்கரவாதிகளா? என்று கேட்கத் தோணுகிறது.
ஒரு நாடு குற்றம் சுமத்தியுள்ள ஒருவருக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டின் ஜனாதிபதிகளெல்லாம் பயங்கரவாதிகள் என்றால், மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளி என அமெரிக்காவே ஒப்புக் கொள்ளும் டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பயங்கரவாதி தானே? தட்ஸ்தமிழ்.காம் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவன் - இவன் என ஏக வசனத்திலும் பயங்கரவாதி ஒபாமா என்றும் தன் செய்திகளில் குறிப்பிடுமா?
பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு மாநகராட்சிக்கு ஒருவர் என்றளவில்கூட செய்தியாளர்கள் இருப்பதில்லை. இணையத்தில் மட்டும் செயல்படும் தட்ஸ்தமிழ்.காம் ஆங்கிலச் செய்திகளையும், பிற ஊடகங்களின் செய்திகளையும் வெட்டி, ஒட்டி சுட்டுதான் செய்திகளை நிரப்புகிறது என்பதை இணையத்தில் வலம்வரும் எம்போன்ற வாசகர்கள் அறிவர். இந்த லட்சணத்தில் எல்லைதாண்டிய செய்திகளை ஏனோதானோவென, பத்திரிக்கை தர்மம் என்றால் என்னவென்றே தெரியாமல் செய்தி வெளியிடுகிறார்களே என்ற வேதனையில்தான் இதை வாசகர் மடல் பகுதிக்கு அனுப்புகிறேன்.

எம்போன்ற நடுநிலை வாசகர்களின் எதிர்பார்ப்பை இத்தகைய செய்தித்தளங்கள் நிறைவேற்றப்போவதில்லை என்பதால் முடிந்தவரை அவர்களின் செய்திகளை சீரியசாக எடுக்கப்போவதில்லை. இந்நேரம்.காமில் வாசகர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடுநிலை செய்திகளும் வருவதாக அலுவலக நண்பர் சொன்னதன்பேரில் இந்த மடலை எழுதினேன். பிரசுரிக்கத் தகுதியானது என்று கருதினால் தயவு செய்து அடித்தல்/திருத்தலின்றி உங்கள் தளத்தில் வெளியிடவும்.

"மெய்ப்பொருள் காண்பதறிவு" தமிழ் வாழ்க! தமிழன் வாழ்க!
- கோ.வள்ளியப்பன், ஈரோடு.

நன்றி: இந்நேரம்.காம்
தான் யார் என்பதையே மறந்த பாலஸ்தீன முஸ்லிம் சிறைவாசி
 
 கான்யூனிஸ் நகரைச் சேர்ந்தவர் வதீ தம்மான். அவருக்கு வயது 30. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை இவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது. தற்போது தன்னுடைய தண்டனைக் காலத்தை ஏறத்தாழ பூர்த்திசெய்துள்ள நிலையில் உள்ள அவர், நஃப்ஹா பாலைவனச் சிறையில் இருந்து நெகேவ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
 

"இந்தப் பலஸ்தீன் இளைஞர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையின் காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். தன்னுடைய நிலைகுறித்து அவர் பலமுறை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியபோதும், அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. எனவே, மிக நீண்ட காலமாக ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளான அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. பின்னர், அவர் தன்னைப் பற்றிய சுயபிரக்ஞையை இழந்தவரானார். மிகக் கடுமையான ஞாபகமறதியால் அவதியுற்ற அவரை, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் எய்ஷல் சிறைச்சாலைக்கு மாற்றியது. தான் யார் என்பதையே மறந்துபோய்விட்ட நிலையில் அவர் தற்போது வாழ்ந்து வருகிறார். தம்மானின் இன்றைய அவலநிலைக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின் மிருகத்தனமான நடைமுறைகளும் மனிதாபிமானமற்ற அலட்சியப் போக்குமே காரணமாகும்" என 'ஹுஸாம்' எனும் சிறைக் கைதிகளுக்கான சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வதீ தம்மானின் தற்போதைய நிலை குறித்துக்கூறும் பலஸ்தீன் மனித உரிமைகள் அமைப்பு, "தன்னைச் சுற்றி இருப்பவர்கள் யாரையுமே அடையாளம் கண்டுகொள்ள முடியாதளவு அவர்  தன்னுடைய சுயபிரக்ஞையை முற்றாக இழந்துவிட்டார். குறைந்தபட்சம் தன்னுடைய குடும்பத்தவரைக்கூட அவரால் இனம்காண முடியவில்லை. ஆரம்பத்திலேயே அவருடைய நோய் நிலையைப் பற்றித் தெரிந்தும், அவரைக் குணப்படுத்துவதற்கான எந்த ஒரு சிகிச்சையும் வழங்காமல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகம் புறக்கணித்தமை மிகப் பெரும் மனித உரிமை மீறலாகும்" என சுட்டிக்காட்டியுள்ளது.