Thursday, April 28, 2011

சிரியா கலவரத்தின் பின்னணியில் அமெரிக்கா - விக்கி லீக் அதிர்ச்சி தகவல்!

E-mail அச்செடுக்க
அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவில் நடக்கும் ஆட்சிக்கு எதிரான போராட்டத்துக்கு அமெரிக்காவே காரணம் எனவும் அமெரிக்கா சிரிய போராட்டத்துக்குப் பண உதவி செய்வதாகவும் விக்கி லீக்ஸ் அதிர்ச்சிகர செய்தி வெளியிட்டுள்ளது.
அரபு நாடான சிரியாவில் அதிபர் பாஷார் அல்- ஆஷாத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. துனீஷியா, எகிப்து போராட்டங்களைத் தொடர்ந்து கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கிய சிரியா போராட்டம் தற்போது வலுவடைந்துள்ளது.
போராட்டத்தை ஒடுக்க சிரிய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். அவர்களின் இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சிரியாவில் போராட்டம் வலுவடைந்துள்ளது. இந் நிலையில், "சிரியாவில் போராட்டம் நடக்க அமெரிக்காவே காரணம்" என விக்கி லீக் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதரகங்களின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு அமெரிக்காவின் சட்டவிரோத செயல்ப்பாடுகளை வெளிப்படுத்திவரும் விக்கிலீக் இணையதளம் சமீபத்தில் சிரியா குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

அதில், "சிரியாவில் கலவரத்தைத் தூண்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பண உதவி செய்தார். அத்துடன் சிரிய அதிபருக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒளிபரப்ப லண்டனைத் தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கும், புஷ் அரசு பண உதவி அளித்தது.
அதற்காக புஷ் மொத்தம் ரூ.30 கோடி வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அந்த தனியார் தொலைக்காட்சி சிரியாவில் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. அதன் எதிரொலியாகத்தான் தற்போது அங்கு கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், இதற்கான ஒப்பந்தம் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்  புஷ்சுக்கும், சிரியா எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே கடந்த 2005-ம் ஆண்டு டமாஸ்கஸ்சில் ஏற்பட்டது.

அவரது ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த நிதி உதவி ஒபாமாவின் ஆட்சியிலும் தொடர்கிறது. ஒருபுறம் கலவரத்தைத் தூண்டிக் கொண்டே மறுபுறம் சிரியாவுடன் உறவைப் பலப்படுத்துவது போன்று அமெரிக்கா நடிக்கிறது. கடந்த 6 வருடத்தில் கடந்த ஜனவரி மாதம்தான் முதன் முதலாக சிரியாவுக்கான தூதரை அமெரிக்கா நியமித்தது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸின் இப்புதிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, April 26, 2011

வெல்பேர் பார்ட்டி: தலைமைக்கான  போட்டி என அறிவு ஜீவிகள் விமர்சனம்

21 April 2011 - 11:46pm

நியூ டெல்லி: ஜமாஅத்-எ-இஸ்லாமி-யால் துவக்கப்பட்ட வெல்பேர் பார்ட்டி ஆப் இநதியா குறித்து கேட்ட போது   "இது ஒரு சீரழிவு" என்கிறார் சிந்தனைவாதியும், புகழ் பெற்ற முஸ்லிம் சமூக அமைப்பின் சேர்மன்-ஆகவும் பதவிவகிப்பவர். சமூகத்தை ஒன்றிணைப்பதில் இது பெரும் தடைக்கல்லாக  இருக்கும் என்பது வரும் காலங்களில் உறுதியாகும்.
அவர் மேலும் கூறுகையில்,  “Yeh kayee khabron men se ek khabar hai, politics ke bazaar ki ek aur dukan hai aur ittehad me sabse badi rukawat hai” (இது அன்றாடம் வெளியாகும் செய்திகளில் ஒன்றாகிப் போனது. இது அரசியல் எனும் சந்தையில் துவக்கப் பட்ட புதிய கடையாகும். ஆனால் சமூக ஒற்றுமைக்கு மிகப் பெரிய தடையாக இருக்கும்) சமூக ஒற்றுமையையும், அமைதியையும் கட்டிக்காக்கும் நன்னோக்கோடு தனது பெயரை வெளியிட வேண்டாம் என்கிறார்.
ஜமாத்-எ-இஸ்லாமியின் முஸ்லிம் மஜ்லிசே முஷாவரத்-இல் முன்பு இணைந்து பணியாற்றியவரும், தேசிய ஒற்றுமைக் கழகத்தின் உறுப்பினருமான  நவைத் ஹமித் இவ்விசயத்தில் கருத்துக்கூற மிகவும் தயங்குகிறார். 
 
முஸ்லிம் அரசியல் கட்சி பற்றிய சிந்தனை ஆபத்தானது
 ஹமித், வெல்பேர்  பார்ட்டி மீதுள்ள அதிருப்திக்கு பல காரணங்களைக் கூறுகிறார். மத சார்பற்ற அரசியலுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களை அரசியலில் வலிமைப் படுத்தும் நோக்கோடு செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும், இந்தக் கட்சி ஆபத்தானதும், கெட்ட செய்தியுமாகும். வெல்பேர் பார்ட்டிக்கு சிறந்த எதிர் காலமோ, அரசியல் வெற்றியோ சாத்தியமில்லை, ஏனென்றால், முஸ்லிம்கள் நாடு முழுவதும் சிதறி வாழ்வதாலும், ஒரே மண்டலமாக சேர்ந்து வாழாததாலும் எந்த ஒரு தேசிய முஸ்லிம் அரசியல் கட்சியும் ஒரு போதும் வலிமையான அரசியல் சக்தியாக உருவெடுத்தது இல்லை என்கிறார். முஸ்லிம்கள் இந்தக் கட்சிக்கு தான் ஓட்டு போடவேண்டும் என்பதற்கு போதுமான காரணங்கள் இல்லை. இவருடைய வாதத்திற்கு சான்றாக கேரளா முஸ்லீம் லீக்கை உதாரணமாகக் காட்டுகிறார். இது ஒரு தேசியக் கட்சியல்ல. மாறாக, இது ஒரு மாவட்டக் கட்சியாகும். ஏனெனில், இது தன்னுடைய கிளைகளை மலப்புரம் மாவட்டத்தை விட்டு வெளியில் எங்கும் பரவுவதற்குண்டான எவ்வித நடவடிக்கையையும் எடுப்பதில்லை. மாநிலக் கட்சி என்று கூட கூற முடியாது என்கிறார் ஹமீத். இதைப் போலவே, அசதுத்தீன் ஒவைசி தலைமையிலான மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற கட்சி ஹைதராபாத்தை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படும் நகரக் கட்சியாய் சுருங்கிப் போய் கிடக்கிறது, என ஹமீத் கூறிக் கொண்டே போகிறார்.

WPI கட்சித் தொண்டர்களுக்கு அரசியலுக்குரிய பக்குவம் இல்லை 

WPI தொண்டர்கள் குறித்து பேசும்போது இன்னும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்: "அவர்கள் சமூக நடவடிக்கைகளைச் செய்பவர்கள், அரசியலுக்கு வருமளவுக்கு போதிய பக்குவம் இல்லை" என்கிறார். அவருடைய கருத்துகளுக்கு வலு சேர்க்கும் விதமாக கடந்த கால தேர்தல் நடவடிக்கைகளைச் சொல்கிறார். ஒக்லா தொகுதிக்குட்பட்ட ஜாமியா நகரை எடுத்துக் கொள்ளுங்கள். WPI-இன் தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கும் SQR இலியாஸ் அவர்கள், அப்போதைய காங்கிரஸ் வேட்பாளராகிய பர்வேஸ்  ஹாஷ்மி அவர்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால் மக்கள் பர்வேஸ் ஹாஷ்மிக்குத் தான் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்தனர். பர்வேஸ் ஹாஷ்மி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த பிறகு ராஜ்ய சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பிறகு நடந்த இடைத் தேர்தலில் மீண்டும் Dr. இலியாஸ் அவர்கள் மக்களை காங்கிரஸ்-க்கு ஆதரவாக மாற்றி வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து பிரச்சாரம் செய்தார். இம்முறையும் மக்கள் இவரது கோரிக்கையை புறம் தள்ளி காங்கிரஸ் வேட்பாளர்-ஐ தோல்வி அடையச் செய்தனர். ஆசிப் முஹம்மத் கான் என்ற RJD வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இருந்த போதிலும், இந்திய முஸ்லிம் அரசியல் அமைப்பின் தலைவர் Dr. தஸ்லீம் ரஹ்மானி அவர்கள் கூறும்போது, WPI -இன் அரசியல் கொள்கை மிகவும் அவசியமான ஒன்று எனவும், இது சமூகத்தால் பரிசோதிக்கப் படவேண்டிய ஒன்று என்றும் கூறுகிறார். சிந்தனை ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் WPI மிக வலுவாக உள்ளது என்கிறார் ரஹ்மானி. ஆனால், WPI -இன் தலைமையைத் தயக்கமின்றி குறை கூறுகிறார். நாவைத் ஹமீத் கூறியதைப் போல WPI தொண்டர்களையும் குறை காண்கிறார்.

தொண்டர்கள் தேர்வு செய்யும் முறையை வைத்து அரசியல் பக்குவத்தை சந்தேகப் படுகிறார் Dr. ரஹ்மானி. அவர்கள் கட்சி ஆரம்பித்த விதத்தையும், தொண்டர்கள் தேர்வு செய்த முறையையும் வைத்துப் பார்க்கும் போது, அவர்களால் தேர்தல் அரசியல் மூலமாக எதிர்பார்க்கும் பலனை அடைய முடியுமா என்ற சந்தேகம் வலுக்கிறது, என்கிறார். அவருடைய கருத்துப் படி WPI -ஆல் தேர்ந்தெடுக்கப் பட்ட தொண்டர்கள் தேர்தல் அரசியலில் பக்குவமற்றவர்கள்.

மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறி முஸ்லிம்களின் அரசியல் நிலையை நன்குணர்ந்துள்ள Dr. ரஹ்மானி அவர்கள் கூறும்போது, WPI-இன் தற்போதைய தலைவர்கள் (ஜமாஅத்-எ-இஸ்லாமியில் அங்கம் வகிக்காத) சமூகத்திலுள்ள தலைவர்களுக்கு பொறுப்பளிக்க தயங்குகிறார்கள். ஏனென்றால், எதிர் காலத்தில் கட்சியின் மீதுள்ள கட்டுப்பாடு ஜமாத்-ஐ விட்டுப் போய் விடுமோ என்று அஞ்சுகிறார்கள். இதனால் WPI செய்யும் எல்லா அரசியல் செயல் திட்டங்களும் பயனற்ற முயற்சியாகிப் போகும் என்றும் வருத்தத்தோடு கூறுகிறார். (ஆசம்கர்-க்கு அருகிலுள்ள ஜான்பூர் தொகுதிக்கு உலமா கவுன்சில் சார்பாக Dr. ரஹ்மானி அவர்கள் போட்டியிட்டு தோற்றார். இதனால் கவுன்சிலில் இருந்து விலகி செயல்பட்டு வருகிறார்)

WPI -க்கு ஆதரவாக 
WPI அமைக்கப்பட்டது குறித்து அதன் துணைத் தலைவர் Dr. ஜபருல் இஸ்லாம் கான் கூறுகையில், கட்சி சமூகத்தைப் பிளவுபடுத்தும் என்பதை முற்றிலுமாக மறுக்கிறார். ஒத்த கருத்துள்ள கட்சிகளோடு கூட்டு வைத்து தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ள நாங்கள் எப்படி சமூகத்தைப் பிளவு படுத்துவோம் என்று விளக்கமாகக் கூறுமாறு கேட்கிறார். நாங்கள் எப்போதுமே ஒத்த கருத்து கொண்டோரை ஒருமுகப் படுத்தி வலிமைப் படுத்துவோம் என்று கூறுகிறார் Dr. கான்.
புகழ் பெற்ற மில்லி கெஜட் ஆங்கில மாதமிருமுறை இதழின் ஆசிரியரிடம் Dr. கான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்: கட்சியைப் பற்றி இப்பொழுதே மதிப்பிடத் துவங்கி விட வேண்டாம். கட்சியிடமிருந்து உடனே எதையும் எதிர் பார்க்காதீர்கள். ஒரு அரசியல் கட்சிக்கு 4-5 வருடங்கள் கூட போதுமான காலங்களாக இல்லாத பொது, கட்சி துவங்கி இப்பொழுது தான் பயணத்தை துவங்கி உள்ளோம் என்கிறார் Dr. கான்.

கட்சி திடீரென எவ்வித திட்டமிடுதலுமின்றி இரவோடு இரவாக துவக்கப் படவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக திட்டமிடும் பணியும், கட்சிக்கான ஆள் சேர்ப்புப் பணியும் முறையாக நடந்த பிறகு தான் கட்சியை துவக்கி உள்ளோம். WPI மிக ஆழமான, உறுதியான கட்டமைப்புகளோடு துவங்கப் பட்டுள்ளது. மாற்றுக் கருத்து கொண்டுள்ளோர் நினைப்பது போலல்ல என்று உறுதி படக் கூறுகிறார் Dr. கான்.

Wednesday, April 20, 2011

முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளை தனித் தொகுதிகளாக (RESERVED FOR SC's) அறிவிப்பது ஏன்?

இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிப்பது போன்றதாகும். தனித்தொகுதிகளை ஒரு சமூகத்திற்காக (தவறான முறையில்) ஒதுக்கீடு செய்வதால் வேறு ஒரு சமூகம் ஒடுக்கப்படுகிறது. நம் நாட்டில் பட்டியல் இனத்தவருக்கு தேர்தலில் சில தொகுதிகளை ஒதுக்கப் படுகிறது. இது சட்ட ரீதியான உரிமையாகும். ஆனால் இது சட்ட மன்றங்களிலும், நாடாளு மன்றங்களிலும் முஸ்லிம்கள் தனது பங்களிப்பைச் செலுத்த முடியாமல் செய்து விடுகிறது. முஸ்லிம்களை பட்டியல் இனத்தில் சேர்க்கப்படுவதை சட்டம் தடை செய்கிறது. நாடு முழுவதும் ஏராளமான சட்ட மன்றத் தொகுதிகளிலும், நாடாளு மன்றத் தொகுதிகளிலும் முஸ்லிம்கள், பட்டியல் இனத்தவரை (தலித்துகள்) விட அதிகமாக இருந்தும் அத்தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப் படுகிறது. பட்டியல் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பல தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக இருப்பதைக் காணும் ஒருவரால், முஸ்லிம்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டை உறுதியாக நம்ப முடியும்.

ஆறு வருடங்களுக்கு முன் இப்பிரச்சினை சச்சார் கமிட்டியால் சுட்டிக் காட்டப் பட்டது.

 "பட்டியல் இனத்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகுந்தும் காணப் படுகிற ஏராளமான தொகுதிகள் பட்டியல் இனத்தவர்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளதையும் சச்சார் கமிட்டி அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருந்தது. மாறாக, முஸ்லிம்கள் குறைவாகவும், தலித்துகளின் எண்ணிக்கை மிகுந்தும் காணப் படுகிற ஏராளமான தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக விடப்பட்டுள்ளதையும்" சச்சார் கமிட்டி தனது அறிக்கையில் பதிவு செய்திருந்தது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழக் கூடிய சட்ட மன்றத் தொகுதிகளை தனித் தொகுதிகளாக அறிவித்து, தலித்துகளால் மட்டுமே அத்தொகுதிகளில் போட்டியிட முடியும் என்பது தான் கமிட்டியின் கவனத்தை ஈர்த்தது. இது போன்ற நடவடிக்கைகளால் முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்பு திட்டமிட்டு மறுக்கப் படுகிறது என்ற விவாதம் தவிர்க்க முடியாததாகிறது.

சச்சார் கமிட்டி இன்னும் ஆழமாக இப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்தது. ஆனால் தனித் தொகுதி குறித்த பிரச்சினையில் வாக்காளர்களின் பட்டியலை ஆராய்ந்து இதனை உறுதிப் படுத்த போதுமான அவகாசம் இல்லை. "SC -களுக்காக உதிரப் பிரதேசம், பீஹார், மேற்கு வங்காளத்தில் ஒதுக்கப் பட்டுள்ள  தனித் தொகுதிகளை நாம் ஆய்வு செய்ததில் குற்றச்சாட்டு உறுதியாகிறது" என்கிறது கமிட்டியின் அறிக்கை.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தொகுதிகள் தனித்தொகுதிகளாகவும், தலித்துகள் அதிகமாக வாழும் தொகுதிகள் பொதுத்தொகுதி களாகவும் உள்ளதை விளக்கும் பட்டியல்:-

சட்ட மன்ற தொகுதி
மொத்த மக்கட் தொகை 
முஸ்லிம் களின் எண்ணிக்கை
தலித்து களின் எண்ணிக்கை 
ST 's
SC 's  % 
முஸ்லிம் களின் % 
மேற்கு வங்காளம் : அறிவிக்கப் பட்டுள்ள தனித் தொகுதிகள் 
Basanti
278592
114736
107602
17462
38.6
41.2
Rajarhat
145381
60108
52233
938
35.9
41.3
Nanoor
193775
64827
61803
3834
31.9
33.5
Kulpi
242752
88230
77380
141
31.9
36.3
Ketugram - I
145859
64975
39011
582
26.7
44.5
Sankrail
290924
92942
73191
1761
25.2
31.9
Keshpur
288489
76866
72536
17012
25.1
26.6
Khargram
234780
120557
55320
1918
23.6
51.3
Sagardighi
252293
156870
44992
16882
17.8
62.2
Kaliganj
290957
161705
49349
1447
17.0
55.6
மேற்கு வங்காளம் : பொதுத் தொகுதிகள் 
Sitai
96347
26491
64869
8
67.3
27.5
Haldibari
93867
30036
58070
254
61.9
32.0
Jalpaiguri
280927
40519
170394
16774
60.7
14.4
Kaliaganj
190019
39334
114922
8656
60.5
20.7
Khejuri - II
117438
8306
66658
819
56.8
7.1
Kharibari
88230
4128
44863
17099
50.8
4.7
Tufanganj – II
167455
22083
84790
3176
50.6
13.2
Bamangola
127252
11287
63459
25083
49.9
8.9
Gaighata
300588
18841
144293
4401
48.0
6.3
Bongaon
344044
69777
161918
10245
47.1
20.3

மத்திய தேர்தல் கமிசனின் 2004-ஆம் ஆண்டின் அறிக்கையையும், 2001 -ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது.

தலித்துகள் அதிகமுள்ள தொகுதிகளை தனித்தொகுதிகளாக அறிவிப்பதே சரியான நீதியாகும். முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளை முஸ்லிம்களுக்கு மட்டுமே ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் அவைகளை பொதுத் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்பதே சச்சார் கமிசனின் முன் உள்ள வேண்டுகோள். தொகுதிகளை வரையறை செய்வதில் பகுத்தறிவு முறையை பயன்படுத்தி பாரபட்சம் காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதன் மூலம் சிறுபான்மையினர் சட்ட மன்றங்களிலும், பாராளு மன்றங்களிலும் தனது பங்களிப்பைச் செலுத்த முடியும். மேலும், தேவையான திட்டங்களை வகுத்து முஸ்லிம்களை அரசியலில் பங்கெடுக்கச் செய்ய வேண்டும் எனவும் சச்சார் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அரசு அந்த அறிக்கையை கிடப்பில் போட்டு முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது.

நன்றி: By Mumtaz Alam Falahi, TwoCircles.net,

Monday, April 18, 2011

ஜமாஅத்தே இஸ்லாமி இன்று அரசியல் கட்சியை துவக்குகிறது, 2012 உ.பி. தேர்தலில் போட்டி

லக்னோ: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்-இன் புதிய பரிணாமமாக அரசியல் கட்சியை இன்று துவங்க எல்லா வேலைகளும் தயார். புதிய கட்சியின் பெயர் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா (WELFARE PARTY OF INDIA - WPI ). உத்திர பிரதேசத்தில் 2012 -இல் நடைபெறவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலில் தனது முதல் போட்டியைத் துவக்கத் திட்டமிட்டு உள்ளது.

WPI -இன் ஒருங்கிணைப்பாளர் SQR இலியாஸ் அவர்கள் கூறியதாவது: மகாராஷ்டிரா-விலுள்ள ஒவ்ரங்கபாத்-ஐ சேர்ந்த முஜ்தபா பாரூக்கி அவர்கள் (JIH -இன் அரசியல் பிரிவு செயலாளர்) முன்னிலையில் டெல்லியில் இன்று கட்சி துவக்கப் படுகிறது. இவர் தான் கட்சியின் தேசியத் தலைவராகவும் செயல்படுவார். முஸ்லிம்களின் சமூக, மத இயக்கம் தேர்தல் அரசியலில் பங்கேற்பதாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ள கட்சியின் தேவை இன்றியமையாதது. JIH -இன் பல்வேறு கிளைகளிலிருந்தும் பரிந்துரைக்கப்பட்ட அரசியல் பிரிவு உயர் மட்டக் குழுவால் விவாதிக்கப்பட்டு திங்கள் கிழமை இன்று துவங்குவதென முடிவெடுத்தோம் என்று கூறினார் இலியாஸ். மேலும் அவர் சொன்னார்: இது முஸ்லிம்களின் கட்சியாக மட்டுமின்றி பிற மத மக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். பிற கட்சியை சேர்ந்த தகுதி வாய்ந்த தலைவர்களையும் இணைத்துக்கொள்ள தொடர்பு கொண்டு வருகிறோம். முன்னாள் BSP MP இலியாஸ் அஜ்மி அவர்கள் WPI -இல் இணைந்துள்ளார்.

புதிய WPI -இல் 5 துணைத் தலைவர்களும், 4 பொதுச் செயலாளர்களும் நியமிக்கப்படுவார்கள். கட்சி செயல்படத் துவங்குகின்ற வரை நான் ஒருங்கினைப்பாளராக இருப்பேன். பொறுப்பாளர்களின் பட்டியலை கட்சியின் உயர்மட்டக் குழுவிற்கு அனுப்பிவைக்கப் பட்ட பிறகு விரைவில் பொறுப்பாளர்கள் அறிவிக்கப் படுவார்கள் என்றார் இலியாஸ். இவர் பாபரி மஸ்ஜித் கமிட்டியின் ஆல் இந்திய முஸ்லிம் பர்சனல் லா போர்டு AIMPLB -இன் செயற்குழு உறுப்பினராகவும், ஒருங்கினைப்பாளராகவும் செயல்படுகிறார்.
 வரவிருக்கின்ற உ.பி.தேர்தலில் தன்னுடைய வேட்பாளர்களை களமிறக்க விருக்கும்   WPI, பிற கட்சிகளோடு பேசவும் தயாராக இருக்கிறது. முதற்கட்டமாக எந்த தேசியக்கட்சியோடும் பேச விரும்பவில்லை. சிறிய கட்சிகளோடு பேசி பலமான கூட்டணியாக உ.பி.யில் உருவாக்குவோம். அரசியலில் இருக்கும் யாரும் செய்யக்கூடிய வேலையைத் தான் நாங்களும் செய்கிறோம் என்று கூறினார் இலியாஸ். இவ்வருட பிப்ரவரியில் ஜமாஅத், கட்சியின் கொள்கைகளை வெளியிட்டது. அதில் கட்சி, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை இணைந்து கொள்ள வரவேற்கிறது.
செய்யத் அபுல் அஹ்லா மௌதூதி அவர்களின் தலைமையில் 1941 , ஆகஸ்ட் 26 அன்று லாஹூரில் JIH துவக்கப்பட்டது. 50 லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ளதாக பெருமைப் பட்டுக் கொள்ளும் JIH -ன் மாணவர் பிரிவாக ஸ்டூடன்ட் இஸ்லாமிக் ஆர்கனைசேசன் (SIO ) செயல்படுகிறது.

வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பன்னூலாசிரியரும், புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞ்சருமான  மௌலானா செய்யத் ஜலாலுதீன் உமரி அவர்கள் தற்போதைய தலைவராக செயல்படுகிறார்கள்.

ஜமாத்தின் அரசியல் பிரவேசம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் கட்சியான சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா-விற்கு போட்டியான கட்சியாகவே மக்களால் பார்க்கப்படுகிறது. துவங்கி இரண்டே ஆண்டுகளில் 12 -க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.


(With inputs from TCN Staff Reporters in Delhi and Kerala)

By Mohd Faisal Fareed, TwoCircles.net,

Sunday, April 17, 2011

எங்களின் துயரத்தைப் போக்க எந்த முஸ்லிம் தலைவர்களும் இல்லை: சென்னை வாழ் குடிசைவாசிகள்  

சென்னை: தமிழகத்தின் தலைநகரம் சென்னையின் புறநகர்ப் பகுதியான புளியந்தோப்பில் வசித்து வருபவர் தான் ரபீக். 

மூன்று விதமான வேலைகளைச் செய்தும் அவரால் தன்னுடைய பொருளாதாரத் தேவையை நிறைவு செய்ய முடிவதில்லை. குடும்பத்தில் மூன்று மகள்கள், ஒரு மகன், மனைவி சக்கீனா உட்பட மொத்தம் ஆறு பேர். பகல் நேரங்களில் துணியை (அயன்) தேய்த்துக் கொடுக்கும் வேலையையும், மாலையில் காவல் காக்கும் வேலையையும், வாரத்தில் மூன்று நாட்களுக்கு ஐஸ் விற்கும் வேலையையும் செய்கிறார். அவருடைய வருவாயைப் பற்றி விசாரித்தால் நல்லதொரு வேலையை எதிர்பார்க்கிறார். 

இதுபோன்று பசியிலும், பட்டினியிலும் வாடுவது இவர் மட்டுமல்ல. சலீம், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர். பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். தனித்து விடப்பட்டவர் மீண்டும் தன்னுடைய ஹிந்து சகோதரியிடமே அடைக்கலம் புகுந்துள்ளார். நோய் தாக்கப் பட்டதால் தன்னுடைய கண்டக்டர் பணியை விட்டுவிட நேர்ந்தது. ஓய்வூதியம் எதையும் பெறமுடியாமல் ஹிந்து சகோதரியின் தயவில் வாழ வேண்டியதாகிவிட்டது. அவரோ தன் குடும்பத்தில் ஏழு பேரைச் சிரமத்துடன் பராமரித்து வருகிறார்.

வட சென்னையிலுள்ள புளியந்தோப்பு, பெரம்பூர், தாதாஷாமக்கான், பென்சனர் சந்து, லால்குண்டா, வண்ணாரப் பேட்டை போன்ற பகுதிகளுக்குச் சென்றால் இதே போன்று வறுமையிலும் கண்ணியமாக வாழும் பலரை நாம் காண முடியும்.






சலீம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தனது ஹிந்து சகோதரியின் வீட்டில் 
 இது போன்ற குடிசைப் பகுதிகளில் வறுமையிலும், சுகாதாரமின்றியும் வாழும் மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் தான். வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவதால் வருமானமின்றியும், பாதுகாப்பான வீடுகளின்றியும், சுகாதாரமற்ற சுற்றுப்புறங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள் கிடைக்கப் பெறாமலும் வாழ்ந்து வருகின்றனர். தரமான மருத்துவ வசதியும், கல்வி கற்கும் வாய்ப்புகளும் கிடைப்பதில்லை.





முஸ்லிம்களின்  சென்னை குடிசைப் பகுதி 
குறுகலான சாலையும், தெருவிளக்கு பராமரிப்பின்றியும் விடப்பட்டுள்ள இப்பகுதிகளின் நிலை குறித்து சட்ட சபை தேர்தல் சமயத்தில் மட்டுமே திமுக-விற்கு நினைவு வருகிறது. ஏன் இந்த முஸ்லிம்கள் கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட பல்வேறு  வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப் பட்டார்கள்? என்று யாராலும் கேட்காமல் இருக்க முடிவதில்லை.






TNTJ-வின் கொடி வரையப்பட்டுள்ள சென்னை குடிசைப் பகுதி
 
மிகவும் வருத்தத்திற்குரியது என்னவென்றால் சிங்காரச் சென்னையின் புறநகரான இப்பகுதிகளில் தான் 20-க்கும் குறையாத முஸ்லிம் அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக், இப்படி பட்டியல் நீள்கிறது. நாங்கள் தான் முஸ்லிம்களின் துயர் துடைக்க போராடுபவர்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்களைப் பற்றி இப்பகுதியில் ஏழ்மையிலும், நிராதரவற்றும் வாழும் முஸ்லிம்களிடம் கேட்டால், எந்த கட்சியின் பொறுப்பாளர்களும் எங்களை இது வரை சந்திக்கவுமில்லை, எந்த உதவியும் செய்யவுமில்லை என்ற கவலை தோய்ந்த பதில் தான் கிடைக்கிறது.







பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பிச்சை எடுக்கும் பெண், முஸ்லிம் குடிசைவாசிகள் அதிகம் வசிக்கும் பெரம்பூரில்
 
"ஆம், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் சமயத்தில் மட்டும் ஒட்டுக் கேட்டு வரும் இவர்கள் பிறகு காணாமல் போய் விடுகிறார்கள்" என்கிறார் அப்துல் சத்தார். "இந்த முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவே ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இவர்கள்
 எல்லோரும் பதவிக்கும், பணத்திற்கும் அடிமைகள். இவர்கள் தங்களுடைய திட்டங்களில் இந்தச் சேரிப் பகுதிகளைப் பற்றி விவாதிப்பதே இல்லை. மாறாக அப்பகுதி மக்களுக்களை எப்பொழுதாவது சந்தித்து உதவிகள் செய்வது மட்டும் தான் இவர்கள் செய்யும் பெரிய பணி" என்கிறார் இக்குடிசைப் பகுதிகளுக்கு அருகில் வாழும் சமூக சேவகர் அப்துல் ரஹ்மான்.






சென்னை சேரியில் மதரசா மாணவர்கள்
 
 நடுநிலைச் சிந்தனையை முஸ்லிம்களிடையே ஏற்படுத்துவதற்கான அமைப்பின் பொதுச் செயலாளர் பைசுர் ரஹ்மான் அவர்கள் கூறும்போது, "வட சென்னையில் ஏழ்மை நிலையில் வாழும் முஸ்லிம்களின் நிலையை முன்னேறச் செய்வதில் முஸ்லிம் தலைவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள். சமூகத் தலைவர்கள் தங்களின் கவனத்தை இப்பகுதி மக்களின் மீது ஒருமுகப் படுத்துவது அவசரமான அவசியமாகும்" என்று.





சென்னை புறநகர் சேரிவாழ் முஸ்லிம்களின் நிலை
முஸ்லிம் தலைவர்களுக்கு இப்பகுதி முஸ்லிம்களின் மீதுள்ள கடமை பற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர் பாத்திமா முசப்பார் அவர்களிடம் TwoCircles.net கேட்டபோது,





சென்னை சேரியில் வாழும் ஆதரவற்ற முதியவர்
பின் தங்கிய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சுயநலத் தலைவர்களை புறந்தள்ளி நாங்கள் பொறுப்பேற்று இருக்கிறோம். சமூகத்தைப் பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப் பட்டதில்லை. விரைவில் நீங்களே மாற்றத்தைக் காண்பீர்கள் 

சென்னை சேரியில் முஸ்லிம்கள் நடமாடும் குறுகலான இருள் சூழ்ந்த சந்து
 
நன்றி: By Md. Ali, TwoCircles.net,