Tuesday, May 31, 2011

யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்

 

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர்.

இவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சுருக்கமாக...

அது செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் அப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.

இந்த சூழ்நிலையில் தான் யுவான் ரிட்லி அவர்கள், தாலிபான்களை பற்றி செய்தி சேகரிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து அப்கானிஸ்தானிற்கு புறப்பட்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தும் மறைமுகமாக அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார். எப்படி? புர்காவை அணிந்து, எல்லையார மக்கள் செல்வது போல் கழுதையின் மீது பயணம் செய்து அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார்.

உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், தாலிபன் வீரர் ஒருவரின் முன், கழுதையிலிருந்து தவறி விழுந்து மாட்டிக்கொண்டார். உளவாளி என்று சந்தேகம் எழுப்பி தாலிபன் அரசாங்கம் அவரை சிறையில் தள்ளியது. பதினோரு நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு, அக்டோபர் 9, 2001ல், தாலிபன்களால் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையிலிருக்கும் போது தன்னை ஒரு தாலிபன் வீரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைத்ததாகவும், தான் மறுத்து விட்டதாகவும், ஆனால் சிறையிலிருந்து வெளியே சென்ற பின் குரானைப் படிப்பதாக தான் அந்த வீரரிடம் சொன்னதாக யுவான் ரிட்லி பின்னர் தெரிவித்தார்.

கொடுத்த வாக்குறுதியை காப்பதற்காகவும், மேலும் பெண்களின் நிலை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று ஆராய்வதற்கும் குரானைப் படிக்க, 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...

இனி இவர் சொன்ன சில தகவல்கள்...

சிறையிலிருந்த போது...

"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்திருக்கிறேன்.

அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.

இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப் போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை, என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...

சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...

தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,

"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.

அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?

இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..

என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?

இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை அளித்தால் போதுமாம்.

இதனை அந்த குழுத்தலைவர் என்னிடம் விவரித்தார். தாலிபன்கள் மீதான வெறுப்பு உச்சத்தில் இருந்த நேரமது. அவர்கள் சொல்லியதில் நிறைய அர்த்தமிருக்கிறது. மேலும் சண்டே எக்ஸ்பிரஸ் குழுவினர் என்னை காப்பாற்ற எடுத்த முயற்சி அளப்பறியது"

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே, அதாவது இஸ்லாத்தை பற்றி படித்துக்கொண்டிருந்த போதே, மது அருந்துவதை நிறுத்தி விட்டார்.

"இஸ்லாம் என் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்துவிட்டது. நான் மதுவை நிறுத்தி விட்டேன். இனி தொலைப்பேசியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ஆண் நண்பர்களிடமிருந்து பார்ட்டிகளுக்கு செல்ல எப்போது அழைப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கவும் போவதில்லை"

இவருக்கு இஸ்லாத்தில் உள்ள சந்தேகங்களை களைய பெரிதும் உதவியது, பிரிட்டன் ஊடகங்களால் அடிப்படைவாதி என்றும் தீவிரவாத எண்ணங்களை உருவாக்குபவர் என்றும் சொல்லப்பட்ட பின்ஸ்பரி பார்க் (Finsbury Park Mosque, North London) மசூதியின் இமாம் அபு ஹம்சா அல்-மஸ்ரி.

"அவர் எனக்கு மிகவும் உதவியிருக்கிறார். ஒருமுறை எனக்கு அவரிடமிருந்து அழைப்பு.

சகோதரி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக வாழ்த்துக்கள்.

இல்லை இல்லை, நான் இன்னும் தெரிந்துக்கொள்ளவேண்டியது இருக்கிறது.

அப்படியா, ஒன்றும் அவசரமில்லை, நன்றாக ஆராய்ந்து செயல்படுங்கள். உங்களுக்கு உதவி தேவையென்றால் முஸ்லிம் சமுதாயமே உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நமக்கு மரணம் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். நாளையே நீங்கள் இறந்தால் நீங்கள் சேருமிடம் நரகம்தான்...

ஊடகங்களோ இவரை தவறாக சொல்கின்றன, ஆனால் இவரோ மிகவும் கண்ணியமானவராக தெரிந்தார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தன.அந்த வார்த்தைகள் நான் இஸ்லாத்தை ஏற்கும்வரை என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தன"

யுவான் ரிட்லி அவர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்தவுடன் தன்னால் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டது ஐந்து வேலை தொழுகைகளைத்தான். இப்போது அவர் அதனை நிவர்த்தி செய்து கொண்டு விட்டார். அல்ஹம்துலில்லாஹ்

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளை கடுமையாக விமர்சிப்பவர்...

அமெரிக்காவின், தீவிரவாதத்தின் மீதான போரானது, உண்மையில் இஸ்லாத்தின் மீதான போர் என்று கூறியவர்.

தான் சிறையிலிருந்தபோது இஸ்ரேலின் உளவுத்துறை தன்னை கொல்ல சதி செய்ததாகவும், அதன்மூலம் தாலிபன்களின் மீதான போருக்கு ஆதரவு கூடுமென அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் கூறியவர்.

பல சமயங்களில் சகோதரி யுவான் ரிட்லி அவர்களின் வார்த்தைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஒரு முறை அவர் கூறினார்...

"கோக கோலாவை (Coca Cola) முஸ்லிம்கள் குடிப்பது நம் பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் சகோதரிகளின் ரத்தத்தை குடிப்பதற்கு ஈடாகும். இதற்கு நாம் நேரடியாக இஸ்ரேலிய ராணுவத்திடம் சென்று குண்டுகள் கொடுத்து நம் பாலஸ்தீனிய மக்களை சுடச்சொல்லலாம்"

ஆவேசமாக பேசக்கூடியவர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், மிகுந்த துணிச்சல்காரர்.

அரசுகளால் தீவிரவாதிகள் என்று கூறப்படும் சிலருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர்.
ஒருமுறை சவூதி இளவரசரிடம் கைக்குலுக்க மறுத்து தன் வேலையை இழந்தவர்.

இப்படி பல சொல்லலாம்.

முஸ்லிம்களுக்கெதிரான செயல்களை கண்டித்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

ஒருமுறை "ஏன் சிலர் (Islamophobes) முஸ்லிம்களை கண்டால் பயப்படுகிறார்கள்" என்று ஒருவர் கேட்டதற்கு, "நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை அவர்கள் நம்மை பார்த்து பயந்து கொண்டுத்தான் இருப்பார்கள் (They will fear us until we fear Allah(swt))" என்று கூறியவர்.

மேலும் "ஏனென்றால், நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை, நமக்கு மது தேவையில்லை, பார்ட்டிகள் தேவையில்லை, பப்புகள் (pub) தேவையில்லை, இப்படி அவர்கள் வியாபாரத்தை பெருக்ககூடிய பல நமக்கு தேவையில்லை. இதனால் தான் பயப்படுகிறார்கள்"

தன்னை மிகுந்த நெகிழ்ச்சி அடையச்செய்த ஒரு நிகழ்ச்சியாக அவர் கூறியது...

"எனக்கு இறைவன் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில வருடங்களிலேயே கொடுத்தான். ஒருமுறை தொழுகைக்கு தாமதமாகிவிட்டது. பாங்கு சொல்லிவிட்டார்கள். நான் அவசர அவசரமாக ஓடுகிறேன், அங்கே சென்றால் என்னைப்போல பலரும் தாமதம். நாங்கள் எல்லோரும் முட்டிமோதி கொண்டிருக்கிறோம் பள்ளிவாயிளுக்குள் நுழைய. ஒரே குழப்பம்.

அப்போது தக்பீர் சொல்லப்பட்டது. நான் என் தொழுகை விரிப்பை சாலையிலேயே விரித்து விட்டேன். அப்போது பார்க்கிறேன் என் முன்னும் , பின்னும் ஆயிரக்கணக்கான மக்கள், மிக அழகாக வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார்கள், மிக அதிக ஒழுக்கத்துடன். சில நொடிகளுக்கு முன் குழப்பங்களுடன் இருந்த இடமா இது?

நான் சொல்லுகிறேன், உலகில் எந்த ஒரு ராணுவமும் இப்படி ஒரு ஒழுங்கை ஒருசில நொடிகளில் கொண்டுவரமுடியாது. பாருங்கள் என் குடும்பத்தை, இதுதான் எங்கள் ஒற்றுமை, இதுதான் எங்கள் சகோதரத்துவம்.

இந்த சகோதரத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடித்திருந்தால், இன்று அவர்கள் நம் நாடுகளை நெருங்கியிருக்க மாட்டார்கள். நம் சகோதரர்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள்"

ஹிஜாப்பைப் பற்றி இவர் சொல்ல கேட்கனுமே...அடடா...

"ஹிஜாப் எங்கள் உரிமை. நான் முஸ்லிமென்பதை காட்டுகிறது. என்னிடம் மதுவை நீட்டவேண்டாம் என்று சொல்கிறது, என்னிடம் தவறான பேச்சுக்களை பேச வேண்டாம் என்று சொல்கிறது. இது ஏன் இவர்கள் கண்களை உறுத்துகிறது? என் பண்புகளை பார்த்து இவர்கள் என்னை மதிக்கட்டும், என் உடைகளை பார்த்தல்ல. அப்படி என் உடைதான் இவர்களுக்கு முக்கியம் என்றால் அவர்கள் நட்பு எனக்கு தேவையில்லை. ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணியாததற்கு எந்த ஒரு ஆதரவையும் என்னிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம்"

ஒருமுறை ஒரு நாட்டில் நடந்த கலந்துரையாடலில், ஒரு பெண் இவரிடம்,

"இந்த நாடு தான் மிகுந்த வெப்பமுள்ள நாடாயிற்றே...இங்கேயும் நீங்கள் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு,

சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் சொன்ன பதில், "நரகம் இதைவிட வெப்பமாய் இருக்கும், பரவாயில்லையா?" என்பது...

இறைவன், தான் நாடியவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வரும் ஒவ்வொரு விதமும் வியப்பைத் தருகின்றன. அவர்களின் மூலம் அவன் நிறைவேற்றும் காரியங்களும் நம் கற்பனைக்கெட்டாதவை. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

சமீபத்தில் நான் கண்டு வியந்த மற்றுமொருவர் சகோதரர் ஜோஷுவா எவன்ஸ் (Br.Joshua Evans) அவர்கள். இவருடைய "How the Bible led me to Islam" என்ற வீடியோவை பாருங்கள், யு டியுப்பில் கிடைக்கிறது. இவர்களைப் போன்றவர்களை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் பல கேள்விகள் எழுகின்றன. அவற்றில் முக்கியமான கேள்வி "Did I took Islam for Granted?" என்பதுதான்...

யுவான் ரிட்லி அவர்களுக்கு தற்போதிருக்கும் ஒரு மிகப்பெரும் ஆசை, தன் மகள் டைசி (Daisy) இஸ்லாத்தின்பால் வரவேண்டும் என்பதுதான்.

"ஆம், அவள் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அவளாக வரவேண்டும்"

ஒருமுறை யுவான் ரிட்லி அவர்கள் மிக அழகாக சொன்னது...

"இஸ்லாத்தில், இறைநம்பிக்கையை வைத்தே ஒருவர் உயர்நிலையை அடைய முடியும், அழகினாலோ, வைத்திருக்கும் பணத்தினாலோ, பதவியினாலோ அல்ல"

அவர் சொன்ன இந்த குரானின் அர்த்தங்கள் நம்மிடம் என்னென்றும் இருக்க வேண்டும், நிலைக்க வேண்டும்.

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Saturday, May 28, 2011

பாப்புலர்  பிரண்ட் ஆப் இந்தியாவின் "இஸ்லாத்தை அறிவோம்" சிறப்பு பயிற்சி முகாம் 
















Tuesday, May 24, 2011

இறைத் தூதரின் படம் மீதான சர்ச்சையும், முஸ்லிம்களும்


By Manzar Bilal, TwoCircles.net,

பாட்னா: இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் கற்பனைப் புகைப் படம் மீண்டும் ஒரு பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. டெல்லியிலிருந்து வெளியிடப் படும்

தேர்தல் சீர்திருத்தம் செய்ய SDPI வலியுறுத்தல்

ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் உறுப்பினர் தேர்வு முறை

பெங்களூர்: கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் சட்ட, நாடாளு மன்றங்களில் உறுப்பினர்களை நியமனம் செய்யும் தேர்தல் சீர்திருத்த முறையை அமுல்படுத்த வேண்டும் என்று சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப்  இந்தியா (SDPI) வலியுறுத்தியுள்ளது. இம்முறை உலகில் உள்ள பல ஜனநாயக நாடுகளில் ஏற்கனவே பிரபலமான முறையாக பின்பற்றப்படுகிறது.


இந்த கோரிக்கை, கடந்த இரண்டு நாட்களாக நடந்த SDPI-இன் தேசிய பிரதிநிதிகள் கூட்டத்தின் (National Representative Council - NRC) இரண்டாம் நாளான மே 22 அன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களில் ஒன்றாகும். கட்சியின் எல்லா மட்டத்திலும் உள்ள தொண்டர்கள் நாம் விரும்பக்கூடிய உன்னத லட்சியமான அரசியலில் வலிமை பெறுதல் என்ற கொள்கை வெற்றி பெற தொடர்ந்து எல்லா நேரத்திலும் தொய்வின்றி செயல்பட வேண்டும். ஆண்டு முழுவதும் போராட்ட அரசியலை இடைவிடாமல் செய்து கொண்டிருக்க வேண்டும். தேர்தல் அரசியலில் பெற்ற வாக்குகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. அது சில நேரங்களில் உற்சாகத்தைத் தரும். சில நேரங்களில் பலவீனத்தைத் தரும்.





கடந்த ஏப்ரல், மே 2011-இல் நாட்டின் ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலில் SDPI எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்தப்பட்ட இடங்களிலெல்லாம் கட்சியின் இருப்பை உறுதிப்படுத்தி, மிகப்பெரிய உற்சாக அலைகளை ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. நமக்கான மாற்று சக்தி உருவாகி வருவதை அடித்தட்டு மக்கள் கண்கூடாக கண்டனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மீதமுள்ள 14 தீர்மானங்கள் பின்வருமாறு:

  1. சர்வதேச சூழ்நிலை: அமெரிக்க ஆட்சியாளர்களும், அதன் கூட்டுப் படைகளும் பிற நாடுகளின் சுதந்திரம், ஒருமைப்பாடு, சுய முடிவு எடுக்கும் உரிமை, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றில் தலையிட்டு, அந்நாடுகளின் அமைதிக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருவதற்கு SDPI தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் ஒரு சில நாடுகளின் கைப்பாவையாக மாறி அமெரிக்க, இஸ்ரேலிய நாடுகளின் அராஜகங்களை தட்டிக் கேட்க தகுதியற்று இருப்பதை SDPI மிகவும் கவலையோடு சுட்டிக் காட்டுகிறது. மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தனது தனித்தன்மையையும், திசையையும் இழந்து, ஆதிக்க சக்திகளின் அடக்கு முறைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது.
  2. பொருளாதாரக் கொள்கை:

By Pervez Bari, TwoCircles.net,


2. Economic Policy: The SDPI warns in strong words the prevalent economic policy of the central and many state governments which is detrimental to the sovereignty of the country, inflammatory, a departure from the widely accepted mixed economy, anti-people and anti-farmer, increasing unemployment and disparities among people and regions, disastrous for the environment, and a stumbling block in making India a world economic power. The SDPI feels that India should pursue a balanced and inclusive economic development and shape its economic policy independent of the global pressures.
3. Communalism: The SDPI is of the opinion that the communal politics in the country is unabatedly targeting minorities, SCs, STs, OBCs, and regional aspirations. The communal organizations are also encouraging terrorism and communal conflict in different parts of the country and using their strong influence in administration and media for generating prejudice and mistrust against minorities, SCs STs, and OBCs.
4. Human Rights Violations: The innocent youths implicated in Malegaon, Makkah Masjid, and Samjhauta Express blasts and other terrorist cases should be released immediately, since these sordid events have been proved the handwork of communal organizations. The SDPI demands that the government should institute a national commission of enquiry to document all terrorist events in the country in a comprehensive manner. The SDPI demands for disqualifying Narendra Modi as the Chief Minister since several instances are now on record which indicates that he has misused his authority in unleashing a reign of terror, during 2002 genocide.
5. 15-Point Programme: The SDPI is of the opinion that the much publicized Prime Ministers 15-Point Programme (New) is delivering no good to people in the absence of any structured and valid mechanism for achieving its set targets. The party appeals to the central government to come out with a feasible mechanism for ensuring a just outcome.
6. Caste Census and Poverty Survey: The SDPI welcomes the central government’s decision to undertake caste census and survey of incidence of poverty with new parameters and expect that it will take every care to ensure the achievement of stated objectives of these national level exercises.
7. Women and Child Development: SDPI feels concerned at the decreasing population of women as revealed in the current census. Women have still not been provided equality in social and public life including education, jobs, and respect. The children are exposed to exploitation. The minors are being forced as laborers. The dropout of children particularly among Muslims and Dalits are still high. SDPI demands immediate correction measures to protect the rights of women and children.
8. Environment: The extensive use of polythene, unrestricted and illegal cutting of trees, and digging of mines have posed a new challenge, besides the danger of nuclear plants and SDPI demands that healthy environment friendly atmosphere must be promoted by the concerned citizens, organizations, and the government.
9. Land Reforms: SDPI feels that the tenure-holders must be restored their rights against force acquisition of agricultural land for commercial and industrial purposes. The allocation in GDP must be increased for the agriculture and irrigation and the investment must sufficiently be made to enhance the growth rate. The party also calls upon the government for comprehensive land reforms.
10. Constitutional Crisis in Karnataka: SDPI feels that present Karnataka government has been made captive of opportunists, communalists, criminals, and mine grabbers. The government is surviving on cheap political calculations and has lost the mandate of electorate. The Assembly must be dissolved and fresh elections must be held.
11. Non-Functioning of Government Bodies: A hunt must be made to eliminate the unscrupulous communal, caste-based and corrupt elements from government bodies and key positions. The secular credentials must be checked of officials and the performance of the government bodies must be put under the monitoring of suitable committee.
12. Waqf Act: SDPI feels that the central government has totally failed to do justice with the Waqf affairs even after the exposure of the ills by the Sachar Committee Report (Volume-2). SDPI takes strong exception to the move of central government to constitute central Waqf agency without consulting the Muslim representatives.
13. Minority Ministry in States: SDPI strongly demands that Minority Affairs Ministry must be formed in each state with capable persons having understanding of minority issues. The ministry must be provided sufficient staff and paraphernalia to effectively function and to properly deliver justice to the members of the minorities.
14. Revoke AFSPA: SDPI vehemently voices to revoke the AFSPA and extends solidarity with Irom Chanu Sharmila who is on struggle raising the same demand.
Two papers were presented in the first session on the second day of the NRC meeting. Abdul Rashid Agwan, SDPI’s NWC member, made a PowerPoint presentation on “Proportional Election System: The Remedy against Elective Dictatorship”. The second paper was presented by Prof. P. Koya, also a SDPI NWC member, on the subject “Is There A Different Model of Development?”
EM Abdul Rahman presided over the valedictory session in which Bhai Tej Singh, president of Ambedkar Samaj Party, was the chief guest. The 15-point resolutions were read out and passed in this session.
(pervezbari@eth.net)
SDPI கட்சி மட்டுமல்ல, அது ஓர் லட்சியம்: E.அபூபக்கர்

By Pervez Bari, TwoCircles.net,

பெங்களூரு: "சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்பது கட்சியல்ல. SDPI என்பது ஒரு லட்சியமாகும். அந்த லட்சியம் என்பது, இதே மண்ணில் பிறந்து சொல்லொணா துயரங்களுக்கிடையே அவதிப்பட்ட மக்களின் மனசாட்சியாகும். இது போன்ற அமைப்புகளால் மட்டுமே மக்களின் பங்காலனாகத் திகழ முடியும். நாங்கள் நமது நாட்டுக்கான புதிய புவியியலை வரைந்து கொண்டு இருக்கிறோம். அதற்குள்ளே ஒரு புதிய

Sunday, May 22, 2011

ORISSA & KARNATAKA VIOLENCE MASTERMIND IS PUROHIT

ஒரிஸ்ஸா, கர்நாடகா கலவரங்களின் சூத்திரதாரி புரோஹித்: பிரக்யா
Terrorism
சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு சம்பந்தமாக தீவிரவாதி பெண் சாமியார் பிரக்யா சிங்க் தாக்கூரிடம் NIA விசாரித்து வருகிறது. அப்போது ஒரிஸ்ஸா, கர்நாடகா கலவரங்களின் சூத்திரதாரியாக செயல்பட்டவர் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித் என்பவர் தான் என்பதை ஒப்புக்கொண்டார். ராம்ஜி கல்சன்க்ரா என்னுடைய மோட்டார் சைக்கிள்-ஐ பயன்படுத்தி

NIA TO PROBE KANPUR BLAST (KANPUR KUNDU VEDIPPU - NIA VISAARIKKUM)

கான்பூர் குண்டு வெடிப்பு - NIA விசாரிக்கும்
Human Rights
2008 ஆகஸ்ட் 24-ஆந்தேதி கான்பூரில் நடந்த குண்டு வெடிப்பில்  பஜ்ரங் தல்-ஐ சேர்ந்த இரண்டு பேர்  தப்பிக்க முடியாமல் பலியானார்கள். உ.பி-யின் தீவிரவாத எதிர்ப்புப் படை இதுவரை நடத்திய விசாரணையில் குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை. எனவே புலன் விசாரணையை NIA -க்கு மாற்றப்படுகிறது.

Thursday, May 19, 2011

தீவிரவாதத் தாக்குதலுக்குத் தேவையான நிதியை அளித்தவர் பிஜேபி MP யோகி ஆதித்யநாத்: பாரத் பய்

இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு தீவிரவாதத் தாக்குதலுக்குத் தேவையான நிதியைத் திரட்டியவர் என நம்பப்படும் பாரத் பய்  என்று அழைக்கப்படும் பாரத் மோகன்லால் ரடேஷ்வர்-ஐ விசாரிக்கப்பட்டதில் பிஜேபி MP யோகி ஆதித்யநாத் போன்ற மூத்த RSS, பிஜேபி தலைவர்கள் தான் குண்டு வைக்கச் சொன்னதும், அதற்குறிய பணத்தையும் அளித்தார்கள் என்று ஒப்புக் கொண்டுள்ளார். தேசிய செய்தித் தொலைக்காட்சிச் சேனலான டைம்ஸ் நௌ-க்கு கிடைக்கப் பெற்ற செய்தியில், அவர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தில், "நானும், சுனில் ஜோஷியும் யோகி ஆதித்யனாத்தைச் சந்தித்து, அசிமானந்தா (தான்) உங்களிடம் அனுப்பி வைத்தார் என்று கூறினோம். நாங்கள் ஒன்றிணைந்து பல்வேறு தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம் என்று சுனில் ஜோஷி ஆதித்யனாத்திடம் கூறினார். ஆயுதங்கள், வெடிமருந்துகள், தேவையான நிதியும் கொடுத்து உதவினால், இதை விடச் சிறந்த தாக்குதல்களை நடத்தி முடிப்போம்" என்று கூறியதும், பிறகு வந்து சந்திக்குமாறு ஆதித்யநாத் கூறினார். சில நாட்களுக்குப் பிறகு சுனில் ஜோஷி மீண்டும் ஆதித்யனாத்தைச் சந்தித்து, வெடிமருந்துகளுடன் திரும்பி வந்தார். இதைத்தான் சுனில் ஜோஷி என்னிடம் சொன்னார்".

தன்னுடைய குற்றத்தை மறைக்கும் விதமாக ஒரு நேர்காணலில் ஆதித்யநாத் பேசும்போது, "நான் RSS-ஐச் சேர்ந்தவன். ஆனால், சுனில் ஜோஷி, பாரத் பய் போன்றவர்களை எனக்குத் தெரியாது. என் மீதான விசாரணையை நான் சந்திப்பேன். தகுந்த ஆதாரங்கள் விசாரணை அதிகாரிகளிடம் இருந்தால், எவ்விதமான விசாரணையையும் நான் வரவேற்கிறேன். UPA அரசு புலனாய்வுத் துறையை தவறாகப் பயன்படுத்துகிறது. இவ்வழக்குகளில் இந்தியன் முஜாஹிதீன், சிமி, லஷ்கர் போன்ற அமைப்புகள் ஈடுபடவில்லை என்று இந்த அரசு சான்றளித்துள்ளது. ஆனால், RSS போன்ற அமைப்புகளைக் குறிவைக்கிறது".

"2007-இல் நடத்தப்பட்ட அஜ்மீர் குண்டு வெடிப்பில் சுனில் ஜோஷி தான் மூளையாகச் செயல்பட்டார்" என்று இதற்கு முன்பு அளிக்கப்பட ஒப்புதல் வாக்குமூலத்தில் பாரத் பய் கூறியிருந்தார். "மூத்த RSS தலைவர் இந்த்ரேஷ் குமார் தான் சுனில் ஜோஷியைக் கொலை செய்வதற்கு மூளையாகச் செயல்பட்டார்" என்றும் கூறியிருந்தார். மலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்கு ரூபாய் 70,000, ரூபாய் 50,000, ரூபாய்  40 000 போன்ற தொகைகளை பல்வேறு காலகட்டங்களில் பாரத் பய் கொடுத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  கடந்த பிப்ரவரி 4-ஆந்தேதி குஜராத்திலுள்ள வல்சாத் என்ற இடத்தில் வைத்து பாரத் பய்-ஐ ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப் படை கைது செய்தது.

நன்றி: மில்லி கெஜட்

Wednesday, May 18, 2011

நேஷனல் விமன்ஸ் பிரண்ட் (NWF) நடத்திய கோடை கால இஸ்லாமியப் பயிற்சி முகாம்

கோயமுத்தூர்: நேஷனல் விமன்ஸ் பிரண்ட் (NWF) தேசிய அளவில் பெண்களுக்கான பேரியக்கமாக செயல்படுகிறது. மனித உரிமை மீறல்கள், பெண் அடிமைத்தனம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பெண் சிசுக்கொலை, வரதட்சனைக் கொடுமைகள், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் பெண்களை முன்னேற்றமடையச் செய்வது, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதை எதிர்த்தும், குடும்பப் பிரச்சனைகளில் பெண்களுக்கான ஆலோசனைகள் வழங்குவது போன்ற சமூகத்தை முன்னேற்ற அனைத்து வழிகளிலும் தனது பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. ஆதரவற்ற பெண்களை பொருளாதாரத்தில் தன்னிறைவடைவதற்கு  சுய தொழில் தொடங்கவும் உதவி செய்கிறது. 

மேலும், மாணவிகளுக்கான கோடை கால இஸ்லாமியப் பயிற்சி முகாமையும் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.


இவ்வருடமும் கோவை கரும்புக் கடை ஆசாத் நகரிலுள்ள தாருல் ஹிக்மா பாடசாலையில் கோடை கால இஸ்லாமியப் பயிற்சி முகாம் மே 10 முதல் 15 வரை 6 நாட்கள் நடை பெற்றது. 



அதில் நபிமார்கள் வரலாறு, நபித் தோழியர் வரலாறு, தொழுகை, சொர்க்கம், நரகம், ஒழுக்கம், நயவஞ்சகர்கள், உடல் ஆரோக்கியம், தன்னம்பிக்கைப் பயிற்சி, முஸ்லிம்களின் வரலாறு, குரான் ஓதுதல், வினாடி-வினா போன்ற தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப் பட்டன. 



நிறைவு நாளான மே 15 அன்று நடத்தப் பட்ட பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்பட்டது. கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டிகளும் நடத்தப் பட்டன.

நிறைவு விழாவில் சகோதரர் ஹாரூன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இம்முகாமினால் பெற்றுக் கொண்ட கல்வியை எவ்வாறு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவது என்பது பற்றிய ஆலோசனை வழங்கினார்.

முகாமில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி மகிழ்வித்தனர்.



கலந்து கொண்ட அனைவரும் பெரும்பயன் பெற்றதாகவும், இம்முகாம் கோடை காலத்தில் தவறாமல் நடத்தப் பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து மகிழ்வுடன் இல்லம் திரும்பினர்.

Friday, May 13, 2011

குஜராத்தை விட மோசமான நிலையில் வங்காள முஸ்லிம்கள்

Original_mg-develop-bengal
 நியூ டெல்லி: மேற்கு வங்காள முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும், சமூகரீதியாகவும் தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். மத சார்பற்ற ஆட்சியை வழங்குவதாக மார் தட்டிக்கொள்ளும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தும் முஸ்லிம்களை முன்னேற்ற ஒன்றும் செய்யவில்லை.
New Delhi: Condition of Muslims on the whole is worse than the people belonging to scheduled castes and schedule tribes and they are more backward educationally, economically and socially in West Bengal, the state where leftist or communist government has been ruling for more than three decades and which claims to be more secular than any other party or state. This is the sum and substance of a lecture delivered by Dr. Abu Saleh Sharif, chief economist at National Council of Applied Economic Research (NCAER), a government-funded organisation in a seminar on ‘Relative Development of West Bengal and Socio-Religious Differentials’ at India Islamic Cultural Centre sponsored by Institute of Objective Studies on 22 March ‘11.
The population of Muslims in West Bengal is about 25% of the state’s total population. According to Dr. Sharif Muslims have benefited very little from the state’s development measures and only about 2% (2.1% to be exact) Muslims are employed in government offices, 50% Muslim children do not even go to primary schools and out of the remaining 50% who go to primary schools, 26% go to middle schools and only 12% are able to complete matriculation. About 85% Muslims, more than in any other state, live in villages where there is not much progress. Even the condition of those who live in urban centres is worse than those belonging to SC and ST category. They are deprived of the facilities, concessions and privileges provided by the government to other sections of the population. He said that last year i.e., in 2010 the state government had announced 10 percent reservation for Muslim OBCs. This 10% is in fact illusory because OBC quota is 7% only and 10% of this is 0.7% which is like a drop in the ocean, he said. Dr. Sharif said that all Muslims belong to OBC and hence their quota in all jobs should be 20%. He said that after Gujarat, West Bengal is the only state where not a single pre-matric scholarship has been given to Muslim students.
He said that out of 90 Muslim-concentrated districts in the country, there are 12 such districts in this state for which, in accordance with government schemes, many developmental projects have been introduced and a large amount has been provided but for all these 12 such districts, only a fraction, i.e. only 6% of central government funds, has been spent. This shows utter indifference of the leftist governments towards Muslim minority.
It is true that a fair number of Muslims have been traditionally voting for the leftist government. This is because of government’s steps for land reforms but this too has benefited Muslims very marginally and apparently there appears to be no change in their living standards.
Dr. Sharif made frequent comparisons between Gujarat and West Bengal during his lecture. As regards the condition of Muslims in the field of education in W.B., he said that he got these statistics from the census database and Planning Commission because state government officials are very secretive and not willing to part with such figures, particularly about Muslims. As compared to educational figures/percentages of Muslims given in the second para above i.e., 50%, 26% and 12% in primary, middle and matriculation, the corresponding figures for SCs/STs are 54%, 30% and 13% respectivelyl and for others or general (non-Muslims) the corresponding figures are 80%, 58% and 38% respectively. As compared to only 2.1% Muslims in government jobs in West Bengal, where their population is 25%, their condition is much better in Gujarat where with 9.1% Muslim population out of total population of about 5 crores in the state, their representation in government jobs is 5.4%, he said.
It is significant to note that in 2010 civic elections in West Bengal, performance of leftists was poor which, according to observers, was because of Muslim disenchantment with the government. After that only, and also in view of the forthcoming assembly elections in 2011, the Buddhadeb government announced 10% reservation for Muslims. In order to woo Muslims and also in view of the expected tough competition from Trinamool Congress, the government or communist party increased the number of Muslim candidates for the election from 42 in 2006 assembly election to 56 in 2011 elections in the 292-member assembly.

Monday, May 9, 2011

பேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி

E-mail அச்செடுக்க
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"
என்று அன்று பாடிவைத்தான், பாரதி.

நவீன உலகில் எத்தனையோ பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்களாய், பல்துறை நிபுணிகளாய், சாதனையாளர்களாய்த் திகழ்ந்து வருகின்றனர்.

"இஸ்லாமிய மார்க்கம் பெண்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது; ஃபர்தாவுக்குள் அவர்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது" என்றெல்லாம் உலகெங்கிலும் பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. மார்க்கம் என்ற பெயரால் பெண்களுக்கு இறைவன் கொடையாக அளித்துள்ள திறமைகளை வெளிப்படுத்த விடாமல் மூலையில் முடக்கிப் போடும் சுயநலவாதிகளான ஒருசில ஆண்களால் இந்தக் கோஷம் மேலும் மேலும் வலுப்பெற்று வருவதையும் நாம் மறுப்பதற்கில்லை. எனினும், இத்தகைய கோஷங்களைப் பொய்ப்பித்து, தாம் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளையெல்லாம் வெற்றிகொண்டு சாதனைகளை நிலைநாட்டிவரும் முஸ்லிம் பெண்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களுள் ஒருவர் என்ற வகையில், உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் யூசுஃப் அல் கர்ளாவியின் மகள் இல்ஹாம் அல் கர்ளாவியின் சாதனைகளைச் சுருக்கமாக நோக்குவோம்.

பொதுவாக இயற்பியல், அணுசக்தி, வானியல் முதலான துறைகள் பெண்களுக்குப் பொருத்தமானவை அல்ல; அத்துறைகளில் பெண்கள் நின்றுபிடிப்பதோ சாதனை படைப்பதோ சாத்தியம் இல்லை எனும் கருத்தியல்கள் நம் சமூகத்தில் காலங்காலமாய் நிலவி வருவதை நாமறிவோம். அத்தகைய கருத்தியல்களையெல்லாம் கட்டுடைப்புச் செய்தவர் என்ற பெருமையை அரபு முஸ்லிம் பெண்மணியான இல்ஹாம் அல் கர்ளாவி பெற்றுக் கொள்கின்றார்.

1981 ஆம் ஆண்டு கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எஸ்ஸி பட்டம் பெற்ற இல்ஹாம், 1984 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்திலே பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்து அணுசக்தித் துறையில் எம்.எஸ்ஸி பட்டத்தையும், 1991 ஆம் ஆண்டு மின்னியல் துறையில் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

1981 முதல் 1984 வரை கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய கல்விப் பணியைத் தொடங்கிய இவர்,  1984-1991 காலப் பகுதியில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். 1991 முதல் இன்று வரை கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் இணைப் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகின்றார். அதுமட்டுமன்றி,  1998-1999 ஆம் ஆண்டுகளில் லண்டன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் துறைகளில் இணை ஆய்வாளராகவும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய கல்வியியல் நடவடிக்கைகளுக்குப் புறம்பாகப் பல்வேறு அமைப்புக்களின் நிர்வாகம், திட்டமிடல் முதலானவற்றுக்குப் பங்களிப்புச் செய்யுமுகமாகப் பல்வேறு செயற்குழுக்கள், அமைப்புக்கள் என்பவற்றிலும் இவர் அங்கத்துவம் வகித்துள்ளார். சிலவற்றில் செயற்குழுத் தலைவியாகவும் தன்னுடைய காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். அந்த வகையில், 2007 முதல் கட்டார் பல்கலைக்கழக ஆய்வுக் கொள்கைகள் தொடர்பான செயற்குழு உறுப்பினராகவும், 2005 முதல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு உறுப்பினராகவும்,  2004 முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆய்வுக் குழுத் தலைவியாகவும் இவர் சேவையாற்றியுள்ளார்.
மேலும், 2006-2007 ஆம் ஆண்டுகளில் கணித மற்றும் இயற்பியல் துறை வரவுசெலவுத் திட்டக்குழுத் தலைவியாகவும், 2005-2006 ஆம் ஆண்டுகளில் அதே துறையின் வெளியுறவுக் குழுத் தலைவியாகவும் இருந்து இவர் தன்னுடைய பொறுப்புக்களை மிகத் திறம்பட நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதும் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு அமைப்புக்களில் செயற்குழு உறுப்பினராகவும் செயற்திட்ட ஆலோசகராகவும் இவர் பங்களிப்பு வழங்கி வருகின்றார்.

பேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி துடிப்பும் செயற் திறனும் கொண்ட கல்வியியலாளராகவும் ஆய்வாளராகவும் திகழ்ந்தமைக்கு இவர் பெற்றுக் கொண்டுள்ள ஏராளமான பரிசுகளும் விருதுகளும் சான்றாக அமையும். அந்த வகையில், இவர் 2007 ஆம் ஆண்டு உலக அணுசக்திப் பல்கலைக்கழகம், பரிஸில் உள்ள அரபுலக நிறுவனம், கட்டார் பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு சரவதேச அமைப்புக்கள் முதலானவற்றினால் பரிசுகளும் விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய துறை சார்ந்து ஏராளமான ஆய்வு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள இவர், அரபு முஸ்லிம் பெண் சாதனையாளர்களுள் தலைசிறந்தவராகப் போற்றப்பட்டு வருகின்றார்.

அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற பூமியதிர்ச்சி, சுனாமி மற்றும் அணு ஆலைகள் வெடிப்பு என்பன தொடர்பில் அல் ஜெஸீரா ஆங்கிலத் தொலைக்காட்சி சேவைக்கு இவர் அளித்துள்ள பேட்டி இத்துறையில் அவருக்கிருக்கும் புலமையை உணர்த்தும்.

இவருடைய இணையதளம்:

http://www.ilhamalqaradawi.com/
தொகுப்பு: எழுத்தாளர் லறீனா அப்துல் ஹக்